Showing posts with label ஸ்ரீ பாத மலை/ஆதாம் மலை. Show all posts
Showing posts with label ஸ்ரீ பாத மலை/ஆதாம் மலை. Show all posts

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்னு பதுதா ஸ்ரீ பாத மலை ஏறினார்




gz;ila Njrhe;jphpahd ,g;D gJ}jh jkJ Njrhe;ju tpUj;jhe;jq;fspy; gjpe;Js;s tpguq;fspd; %yk; ,yq;ifapd; tuyhw;Wf;Fj; jkJ gq;fspg;ig nra;Js;shh; vDk; cz;ikia ve;j tuyhw;W khztDk; Vw;fhky; ,Uf;f KbahJ. mth; gjpd;ehd;fhk; E}w;whz;by;; ,yq;ifiag; gw;wp vOjpa Fwpg;Gf;fs; vkf;F ngUk; tuyhw;W Kf;fpaj;Jtk; tha;e;jdthf tpsq;Ffpd;wd. 

gpwg;gpy; Xh; mwhgpauhd ,g;D gJjh fp.gp. 1325 A+d; 14y; nkhnuhf;Nfhtpd; jQ;rpah; efhpypUe;J jkJ gazj;ij Muk;gpj;jhh;. Mgphpf;fhtpYk; MrpahtpYk; Rkhh; 30 tUlq;fis Rw;Wyhthf fopj;j ,th;; fp.gp.1355 ,y; jhafk; Nehf;fpj; jpUk;gpdhh;. ,tiu ehk; mNdfkhf xU ahj;jphpfh; vd;Nw miof;f Ntz;Lk;. mtUila mjp Kf;fpakhd mththf ,Ue;j kf;fhTf;Fk;> kjPdhTf;Fk; ahj;jpiu Nkw;nfhs;Sk; gzpia mtuhy; ,g;gpuahzj;jpd; NghJ epiwNtw;w Kbe;jJ.


gJjhtpd; gpuahz gjpTfspd;gb mth; kyghh; fiuapypUe;J xU gha;kuf; fg;gypy; = ghj kiyia Nehf;fpa ahj;jpiuia Nkw;nfhz;lhh;. mf;fg;gy; mDgtkw;w xU khYkpapdhy; nrYj;jg;gl;ljdhy; ,yq;iff;Fk; kyghh;f;Fkpilapyhd fliyf; flf;f ,f;fg;gYf;F xd;gJ ehl;fs; nrd;wd. mf;fhyj;jpy; $l RKfkhd fhyepiyapd; fPo; ,g;gpuahzj;jpw;F %d;W ehl;fNs nrd;wpUf;Fk;.


nrue;jPg; fiuia fg;gy; mile;Jnfhz;bUe;jJ. gJjh Xh; mUk;ngUk; fhl;rpia fz;lhh;. mth; fUJfpd;wJ Nghy; mJ Mjhkpd; Gdpj ghj milahsk; gjpe;jpUf;Fk; rkd;Fy kiy fk;gPukhf fhl;rp nfhLf;Fk; kj;jpa kiyj; njhlh;fspd; fhl;rpahFk;. Mfhaj;ij njhl xU Gif kz;lyk; nky;y nky;y vOk;GtJ Nghy; mJ fhl;rp je;jJ vd mth; th;zpf;fpd;whh;. jhk; Kjypy; mile;j flw;fiug; gpuNjrk; (Gj;jsk;) ,yq;if Ry;jhdpd; Ml;rpf;Fl;gl;ljd;W vdf; $Wk; mth;> mJ Mhpar;rf;futh;j;jp vDk; Xh; mlhj Ry;jhdpd; mjpfhuj;jpd; fPo; ,Ue;jjdhy; jhk; mq;fpUe;J kPz;Lk; gazkhdjhf $Wfpd;whh;. vdpYk;> mZ$ykw;w fhw;wpd; fhuzkha; eph;g;ge;jpf;fg;gl;L tpUg;gpw;F khw;wkhf jpUk;gpte;J mNj JiwKfj;jpy; eq;$uk; gha;r;r Ntz;ba epyik Vw;gl;lJ.

Mgphpf;fhtpYk; ,e;jpahtpYk; jhk; Nkw;nfhz;l gpuahzq;fspd; %yk; ngw;w mDgtj;jpy; ,g;D gJjh mghu ek;gpf;if itj;jpUe;jhh;. jhk; FWf;fpl NeUk; khw;wkhd #o;epiyfSf;Nfw;g jk;ik khw;wpaikj;Jf; nfhs;s mt;tDgtk; mtUf;F fw;gpj;jpUe;jJ.


Nfhyhfy tuNtw;G

jhk; kyghh; Ry;jhdpd; ikj;Jdh; vdTk;> khl;rpik nghUe;jpa kd;diur; re;jpf;f tpistjhfTk; kd;dUf;fhf xU fg;gy; epiwa md;gspg;Gf;fs; nfhz;L te;jpUg;gjhfTk; ,g;D gJjh xU RNjrj; J}Jtd; %ykhf kd;dUf;F nra;jp mDg;gpdhh;. ,e;jr; nra;jpahy; ngU kfpo;Tw;w kd;dd;> ,g;D gJ}jhit jdJ jiyefuhd gj;jsTf;F mioj;jhd;. gj;jsntd;gJ jw;Nghija Gj;jskhFk;. kd;dDk; mtDila Fbkf;fSk; gJ}jhTf;F Nfhyhfy tuNtw;gpid mspj;jdh;. jiyefhpy; jq;Fk; fhyk;tiu kd;ddpd; tpUe;jpduhf ,Uf;Fk; ngUk;kjpg;igAk; gJ}jh ngw;whh;. 

jdJ tpUe;jpdhpd; gaz tpUj;jhe;jk; Nfl;L Mhpar; rf;futh;j;jp nghpJk; FJ}fykile;jhd;. mj;Jld; Mr;rhpaj;Jf;Fk; cs;shdhd;. kdkfpo;Tw;w kd;dd; khNkijahd ahj;jphpfhpd; ,irTf;Fg; gytw;iwr; rkh;g;gpj;jhd;. nrue;jPgpd; Gdpj kiyia jhprpf;f Ntz;Lnkd;gNj gJjhtpd; msTfle;j mththf ,Ue;jJ. vdNt> mr;rpfuj;ij jhprpf;f cjTkhW kd;did mth; tpeakhf Ntz;bf;nfhz;lhh;. mt; Ntz;LNfhs; cldbahf nrtpkLf;fg;gl;lJ. xU gy;yf;ifAk; mijr; J}f;fpr; nry;y rpy mbikfisAk; kd;dd; mtUf;F toq;fpdhd;. Mz;LNjhWk; ,k;kiyia jhprpj;J te;j Nahfpfs; ehy;th;> me;jzh; %th;> kd;ddpd; Njhoh;fs; gjpd;kUk;> nghUl;fis Ve;jpr; nry;y vtyhl;fs; gjpidtUk; mtUld; mDg;gp itf;fg;gl;ldh;. ,t;thW mth; mtUila ghpthuq;ifis gw;wpa G+uz tpguq;fis jUfpd;whh;.

gJ}jhtpd; gpuahzj;jpdJ Kjw;fl;lk; Gj;jsj;jpw;Fk; rpyhgj;jpw;Fk; ,ilg;gl;l J}ukhFk;. mg;gpuahz J}uj;jpid vJtpj rk;gtKkpd;wp gJ}jh fle;jhh;. mLj;J mth; Nru Ntz;ba ,lk; FUehfyhFk;. mq;Nf efu gpjhf;fs; nra;jpUe;j nghJ trjpfs; mtiu kpfTk; fth;e;jd. mth; $Wfpd;whh;: efuk; jpwikahf jpl;lkplg;gl;L epWtg;gl;bUe;jJ. ePykzpf; fw;fs; gjpf;fg;gl;bUe;j xU nraw;iff; Fsj;ijr; Rw;wpAs;s mofpa gs;sj;jhf;fpy; me;efh; mike;jpUe;jJ.

mth; Kjd; Kiwahf xU nts;is ahidia mq;F fz;lhh;. mJ FUehfypy; ,Ue;J Mz;l kd;ddpd; tpiy kjpf;fKbahj xU nrhj;jhf tpsq;fpaJ. mq;fpUe;Jjhd; mth; jkJ cz;ikahd ahj;jpiuiaj; njhlq;fpdhh; vd;W $wNtz;Lk;. jk; topfhl;bfspd; JizAld; mq;fpUe;Jjhd; mth; mlh;e;j mltpapDlhf mike;jpUe;j my;yy; jUk; xU ghij topNa nry;y Ntz;b ,Ue;jJ.


nrt;tpa Mh;tKs;s ,e;j Njrhe;jphpahdth;> = ghj mltpapD}lhfr; nry;Yk; topapy; gy tprpj;jpukhd fhl;rpfisf; fz;Zw;whh;. mtw;iw jdJ gaz tpUj;jhe;j E}ypy;  gjpe;Js;shh;.

mq;F kdpjh;fis Nghd;W jhbAs;s Fuq;Ffs; fhzg;gl;ld. kuq;fspYk; Gw;fspYk; kiwe;jpUe;j gaq;fukhd ml;ilfs; mt;top nry;Nthh; kPJ jhtpg;gha;e;jd.

vf;fhyKk; ,iyfs; cjpuh kuq;fs; gw;wp mth; th;zpf;fpd;whh;. gRik khwhr; nrbfspy; kyUk; rptg;G Nuh[h> cs;sq;if msT nghpaJ vd;W mth; $Wfpd;whh;. kiyAr;rpapd; kFlkhf tpsq;Fk; filrp Kfl;bd; mbthuj;jpy; kfh myf;]he;jhpd; ngauhy; tpsq;Fk; xU kpduhit mth; fz;lhh;.

mq;Nf kPd;fs; epuk;gpa fpznwhd;Wk; ,Ue;jJ. kiyAr;rpapd; Kjy; kdpjhpd; Gdpj ghj milahsk; ,Uf;fpd;wJ. mjd; jho;tplj;jpy; ahj;jphpfh;fs; jq;fs; Gdpj fhzpf;ifahfg; nghd;idAk; kzpiaAk; NghLfpd;wdh; vd mth; $Wfpd;whh;.


ghj milahsk;

,k;kiyapy; VWk; midtUk; jhq;fs; Rikfis ,q;F ,wf;fp> jhq;fs; kPz;Lk; tUk; tiu ,e;jf; Fifapy; tpl;Lr; nry;tJ tof;fk;. Mjkpd; Gdpj ghj milahsk; ,q;F gjpe;Js;sJ. mJ vt;tsT gj;jpukhf ghiwapy; gjpe;Js;snjdpy;> kdpjNdh> ,aw;ifapd; jpUtpisahly;fNsh mjid mopf;f KbahJ. ghj milahskhdJ Vwf;Fiwa gjpndhU tpaj;jhf;fs; ePsKilaJ. ghjj;jpd; ngUtpuy; mfw;wg;gl;L rPd Njrj;jpw;F vLj;Jr; nry;yg;gl;lnjd;Wk;> mJ mq;F xU Nfhtpypy; itf;fg;gl;;bUg;gjhfTk; $wg;gLfpd;wJ. ghj milahsk; gjpag;gl;bUf;Fk; ghiwapy; xd;gJ Jthuq;fs; ,Uf;fpd;wd. mit xd;gJ fhy; tpuy;fisAk; Fwpf;fpd;wd vd;gJ gpuj;jpal;rk;.

ahj;jphpfh;fs; jq;fk;> nts;sp> Kj;J> ,uj;jpdk;> Nghd;w mjpf tpiyAah;e;j nghUl;fis mq;F fhzpf;ifahfr; rkh;g;gpf;fpd;wdh;. mit mt;tisfspy; ghJfhg;ghf fplf;Fk;. tof;fj;jpd;gb fhjph; Fifapy; %d;W ehl;fis fopf;Fk; ahj;jphpfh;fs;> Gdpj ghj milahsj;ij njhlh;e;J %d;W ehl;fs; jhprpj;Jtpl;L gpd;dh; jk; kPs;gazj;ij Muk;gpf;fpd;wdh;.

Kd;da fhyq;fspy; mq;F nrd;w ahj;jphpfh;fs; Kd;Nahf;fpa ,d;dy;fspdJk;> = ghjj;jpdJk; th;zid ,JNt. mf;fhy tof;fpd;gb ,g;D gJjhTk; = ghjj;jpw;F njhlh;e;J %d;W ehl;fs; khpahij nrYj;jptpl;L khkh topahfj;jpUk;gpdhh;.

kiyabthuj;jpy;> mZfKbah Xhplj;jpy; ePz;l fhykhf epw;Fk; xU jdpkuk; gw;wp mth; Fwpg;gpLfpd;whh;. mt;tw;Gj kuj;jpd; ,iyfs; cjph;tjpy;iynad;Wk;> mt;tpiyfs; ,sikapid kPl;Lj;jUk; mw;Gj rf;jp tha;e;jitnad;Wk; jhk; ahj;jphpfh;fs; %ykhf mwpe;jjhf mth; $Wfpd;whh;. NkYk;> mq;F Jwtpfs; %th; jsh;r;rpaile;JtUk; jq;fs; jirehh;fSf;F cap&;l;Lk; nghUl;L> cjpUk; ,iyfisg; nghWf;fpnaLf;f $ba me;j ,d;g ehs; tUk; vd;w ek;gpf;ifNahL jtk; fplf;fpd;wdh; vd;W ,g;D gJ}jh $Wfpd;whh;.

mwGj; Njrhe;jphpahd ,g;D gJjh mq;fpUe;J Njte;Jiwf;F nrd;W fhyp> fSj;Jiw topahf nfhOk;Gf;F gazkhdhh;.



Sincere Thanks To:

National Archives of Sri Lanka
Moor Islamic Cultural Centre, Sri Lanka

References:

The Ceylon daily News – 1965 March 17, Fri Day
The Ceylon Observer - 1967 April 2

ஸ்ரீ பாத மலையின் வசீகரம்

ஏன் இச்சிகரத்திற்கு ஆதமின் பெயர் இடப்பட்டது?

"பாபா ஆதம் மலை"

பண்டைய அறபுக் கடலோடிகள் அன்றைய உலகின் நாலா பக்கமும் எடுத்துச் சென்று பரப்பிய கதைகளில் ஒன்றுதான் 'அல் றுக்குன்'  என அழைக்கப்பட்ட இச்சிகரத்தைப் பற்றிய கதையாகும். இச்சிகரத்தில் உள்ள அபூர்வ சின்னத்தினை பற்றிய கதையானது சந்தேகத்துக்கிடமின்றி அக்கறையில் குறையாத ஒன்றாகும். ஓன்பதாம் நூற்றாண்டில் இலங்கைக்கும் கீழைத்தேயங்களுக்கும் பல கடற்பிரயாணங்களை மேற்கொண்ட சுலைமான் எனும் ஓர் அறபுக் கடலோடியானவர், இப்புனித மலையை 'அல் றுக்குன்' எனக் குறிப்பிடுகின்றார். 'றுக்குன்' என்பது இத்தீவின் தென்பகுதியின் புராதன சிங்களப் பெயராகும். ஸ்ரீ பாத மலை அப்பகுதியின் எல்லையிலேயே அமைந்துள்ளது.


சுலைமான் என்பாரது கூற்றே இம் மலையுடன் ஆதமை இணைக்கின்ற ஆதாரபூர்வமாக அறியக் கிடக்கும் முதன் முதலான கூற்றாகும். எனினும், கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுகளில் எகிப்திய புராதன கிறிஸ்தவ மரபினர் இம் மலையுடன் பரீட்சயம் உடையவர்களாக விளங்கினர்.


இலங்கை வந்த தேசாந்திரிகளில் ஸ்ரீ பாதத்திற்கு யாத்திரை சென்ற மிகவும் பிரசித்தி வாய்ந்த தேசாந்திரி இப்னு பதூதாவின் கூற்றில்; "கி.பி. 942ல் காலமான இமாம் அபூ அப்துல்லாஹ் அவர்கள்தாம் இந்தியாவிலிருந்து செரந்தீபிலுள்ள இம்மலைக்கான வழியை அறியத்தந்தவராவார்.


"அவ்விருவரும் எதிலிருந்தார்களோ அதைவிட்டும் அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான். மேலும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்களாக இருக்க "நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்" இன்னும் பூமியில் உங்களுக்கு தங்குமிடமும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதும் உண்டு என்று நாம் கூறினோம்." (2:36)

தப்ஸீர் பைஸாவி, தப்ஸீர் காஸின் போன்ற குர்ஆன் விளக்கவுரைகள் யாவும் அல் குர்ஆன் வசனங்களுக்கு வியாக்கியானம் கூறும்பொழுது, பெருமானார் (ஸல்) அவர்களின் அருள் வாக்குகளான புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்களின் திரட்டிலிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு, ஆதம் (அலை) அவர்கள் செரந்தீபில் அல்லது இந்தியாவில் (அல்லது அப்போதைய குமரிக்கண்டத்தில்) 'நூத்' எனும் ஓர் மலையின் மீது இறங்கினார்கள் என்றும் ஹவ்வா (அலை) அவர்கள் அரேபியாவிலுள்ள ஜித்தா எனுமிடத்தில் இறங்கினார்கள் என்றும் கூறுகின்றனர்.

இமாம் இப்னு ஹஜர் அவர்களின் 'துஅபா' போன்ற கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளதாவது; "செரந்தீபிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்காக நாற்பது முறை திருமக்காவுக்கு நடந்து சென்றார்கள். அவ்வித யாத்திரையின் போதுதான் அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களை அறபாத்தில் சந்தித்தார்கள். அதன் பின்பு அவர்கள் தம் மனைவியுடன் இலங்கை திரும்பினார்கள்."

ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் இறங்கியதிலிருந்து கழிந்த காலக்கணக்கை நாம் இஸ்லாமிய கிரந்தங்களிலிருந்து கணிக்க முடியும். முஹம்மது இப்னு அஹ்மது இயாஸுல் ஹனபீ அவர்கள் தமது "பதாஉஸ் ஸுஹுர்" எனும் நூலில் ஆதம் (அலை) அவர்கள் இப்புவியில் இறங்கிய காலத்திற்கும் நூஹ் (அலை) – நோவா – அவர்களின் காலத்திலேற்பட்ட பெரும் பிரளயத்திற்கும் இடையே 2240 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன என்றும், அப்பெரும் பிரளயம் ஏற்பட்ட காலத்திற்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ராவுக்கும் இடையே 3774 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார். 2010 டிசம்பர் மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இஸ்லாமிய புது வருடம் 1432 ஆகும். இதிலிருந்து நாம் ஆதம் (அலை) அவர்கள் இற்றைக்கு 7446 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இறங்கினார்கள் எனக் கணக்கிடலாம். ஜெனஸிஸின் (படைப்பு பற்றி கூறும் விவிலிய நூலின் முதல் அதிகாரம்) பிரகாரம் கணிக்கப்பட்ட காலத்தை நோக்குமிடத்தும் இந்தக் காலக்கணக்கு உறுதிப்படுகின்றது.




பண்டைய அறபு முஸ்லிம்கள் சீனாவுடனும் இலங்கையுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டபொழுதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் நபி ஆதம் (அலை) அவர்களின் புனித பாதம் பதிந்த இச்சிகரத்தினை தரிசிப்பதனை ஒரு நோக்காக கொண்டனர். கடலோடிகள் இச்சிகரத்தின் உதவி கொண்டே தங்கள் பாய்மரக் கப்பல்களை செரந்தீபில் நங்கூரம் பாய்ச்சினர்.

கதைகளினால் உந்தப்பட்ட முஸ்லிம்களின் மனதில், ஆதாமும் ஏவாவும் முதன் முதலில் வசித்த நந்தவனத்தில் ( Garden of Eden) இருந்தே செரந்தீப் மலை உருவானதெனும் கருத்தும் இச்சிகரத்தின் மீதிருந்தே ஆதம் வழிபட்டாரெனும் கருத்தும் பதிந்திருக்கலாம். மரபு வரலாறுகளின்படி, ஆதி பிதாவானவர் சுவனத்திலிருந்து எறியப்பட்டது இச்சிகரத்தின் மீதாகும். தம் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக ஆண்டுக்கணக்காக அங்கு ஒற்றைக் காலில் நின்று அவர் பச்சாதப்பட்டார். ஆண்டுக்கணக்காக அவர் ஒற்றைக்காலில் நின்றதால் பாத அடையாளம் ஏற்பட்டது என்ற செய்திகளும் இல்லாமலில்லை.

எனவேதான் பத்தாம் நூற்றாண்டளவில் இச்சிகரம் 'பாபா ஆதம் மலை' என அழைக்கப்பட்டதோடு, முஸ்லிம்களின் அடிக்கடி செல்லும் தலமாகவும் அமைந்தது.


Reference;
The Ceylon Daily News - 5 February, 1962


The Ceylon Daily News - 1967 March 17, Friday


The Ceylon Observer - 1967 April 22 Saturday

ஸ்ரீ பாதமலை


பக்திக்கும் கற்பனைக்குமிடமான சிகரம்

ஓங்கி நிற்கும் அழகில் ஒரு 'கோதிக் கதெட்ரல்' கோபுரம். இல்லை; ரொபட் நொக்ஸின் வார்த்தைகளிற் கூறுவதானால், கூர் வடிவில் ஒரு சர்க்கரை கட்டி”. இவ்வாறு மத்திய மலைத்தொடர்களுக்கிடையே கம்பீரமாக காட்சி தருகின்றது சமனநல கந்த. தீவெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் பாத வழிபாட்டிற்காக, களைப்பூட்டும் கால்நடையை அதன் உச்சிக்கு மேற்கொள்கின்றனர். அது புத்தரின் புனித பாத அடையாளம் என நம்பப்படுகின்றது.



வரலாற்றிலும் மரபுவழிக் கதைகளிலும் கற்பனை ஓவியங்களிலும் காலக்கணக்கில் கட்டுண்ட இம்மலை, நம்மவர்க்கு மட்டுமன்றி உலகின் கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வருகை தந்த மற்றவர்களுக்கும் புனித யாத்திரை தலமாக விளங்கி வந்துள்ளது. தூர இடங்களிலிருந்து வருகை தந்த தேசாந்திரிகளும் யாத்திரிகர்களும் இத்திருவிடத்தை தரிசித்துள்ளனர். இம்மலையின் வசீகரத்தை பற்றியும் நிறையச் சான்றுகள் பகர்ந்துள்ளனர். ஏழாயிரம் அடிமட்டில் உயரங்கொண்ட இம்மலை, ஒரு பொழுது சமன்” எனும் மலைத் தெய்வ வழிபாட்டிடமாக விளங்கியது. வரலாற்றிலும் மரபு வழிக் கதைகளிலும் இலக்கிய படைப்புக்களிலும் இம்மலை 'சமந்த கூட்ட” (சமனின் சிகரம்) என அறியப்படுகின்றது.


இம்மலை பல்வேறு மதத்தினரால் புனிதமாக போற்றப்படுகின்றது. பௌத்தரோ அங்குள்ள பாத அடையாளமானது, புத்தர் இத்துபீபத்திற்கு மூன்றாம் முறையாக வருகை தந்த பொழுது பதித்து சென்ற பாத அடையாளமென கருதுகின்றனர். முஸ்லிம் எழுத்தாளர்களோ அதனை முதல் மனிதராம் ஆதமின் பாத அடையாளமெனக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அம்மலையை 'பாபா ஆதம் மலை' என்கின்றனர். அதிலிருந்துதான் ஆதாமின் சிகரம்” (Adam’s Peak) எனப் பெயர் வந்தது. பண்டுதொட்டே யாத்திரிகர்களும் தேசாந்திரிகளும் இப்புனித மலையின் புகழைக் கேள்வியுற்று அதனை தரிசித்து சென்றனர். அதுபற்றி தங்கள் அனுபவங்களையும் கருத்து சிதறல்களையும் எழுத்தில் வடித்திருக்கின்றனர். பாரசீகக் கவிஞர் ஒருவரின் கருத்துப்படி மகா அலக்சாந்தரும் இம்மலையில் ஏறியுள்ளார்.


ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி மட்டில் சுலைமான் எனப் பெயரிய முஸ்லிம் தேசாந்திரி இம்மலையில் ஏறினார். அதைச் சுற்றி ரூபிச் (செம்மணிக்கல்) சுரங்கங்களும் மற்றும் மாணிக்க கற் சுரங்கங்களும் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார். அவருக்கு அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தோவியம் படைத்த அபூ செய்து என்பாரும் இம்மாணிக்க கற் சுரங்கங்கள் பற்றி குறிப்பிடுகின்றார். புவியியல் பற்றிய தமது படைப்பில், இம்மலையின் உயரம் பற்றியும் அங்குள்ள மாணிக்க கற்கள், கஸ்தூரி, வாசனை மரங்கள்  என்பன பற்றியும் அவர் விளக்குகின்றார்.

சின்பாத்
அராபிய இரவு புகழ் கடலோடியான சின்பாத் தனது ஏழாவது கடற்பிரயாணத்தின்போது இலங்கையை வந்தடைந்தார். அவர் கூறுகின்றார்; 'மூன்று நாட் பயண தூர்திலிருந்தே தோற்றமளிக்கும் சிகரமானது பல்லின செம்மணிக் கற்களையும் மற்றும் கனிப்பொருள் வளங்களையும் எல்லாவித வாசனைத் திரவிய மரங்களையும் கொண்டுள்ளது. மேற்பரப்பானது சாணை பிடிப்பதற்கு தேவைப்படும் ஒருவித கனிப்பொருளால் மூடப்பட்டுள்ளது. அதனை கொண்டு மாணிக்க கற்கள் வெட்டப்பட்டு மெருகூட்டப்படுகின்றன. அதன் ஆறுகளிலோ 'வைரங்கள்”, அதன் பள்ளத்தாக்குகளிலோ 'முத்துக்கள்”.


கி.பி. 1332ம் ஆண்டளவில் இலங்கை வந்த ஆங்கிலத் தேசாந்திரியான சேர் ஜோன் மண்டர்வில் என்பார், 'ஆதாமும் ஏவாளும் ஏபளின் மரணத்தையிட்டு துக்கம் கொண்டாடிய இடம் இச்சிகரம்” எனக் கூறுகின்றார். அருகிலுள்ள அருவியில் காணப்படும் மாணிக்க கற் குவியல் பற்றியும் அவர் அடிக்கடி குறிப்பிடுகின்றார். கி.பி. 1350ம் ஆண்டளவில் அறபுத் தேசாந்திரியும் யாத்திரிகருமான இப்னு பதூதா என்பவர் இஸ்லாமிய முறைப்படி இத்திருவிடத்தை தரிசித்தார். இக்கால கட்டத்தில் ஸ்ரீ பாதமலை சிறப்பாக முஸ்லிம்களின் நிலையான ஒரு யாத்திரிகைத் தலமாக மாறியது. இப்புனித மலையில் காணிக்கை செலுத்தும் பொருட்டு அவர் நீண்ட தூரம் கடந்தார். ரொபட் நொக்சின் 'இலங்கை” எனும் நூலிலும் ஸ்ரீ பாதமலை ஒரு தனியிடம் வகிக்கின்றது. அவர் கூறுகின்றார். 'இத்தீவு மக்கள் இவ்வடையாளத்தை சென்று வழிபடுவதை ஒரு புண்ணிய கைங்கரியமாக கருதுகின்றனர். பொதுவாக, அவர்களது புத்தாண்டளவில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், அனைவரும் இப்பெரிய உயர்ந்த மலைக்கு வழிபடச் செல்கின்றனர்.

மன்னர்கள்
பல சிங்கள மன்னர்கள் இத்திருவிடத்தில் விசேடமாக அக்கறை செலுத்தினர். முன்னர் நிஸங்க மல்ல (கி.பி. 1187-1196) என்பான் ஒரு முறை இப்புனித தலத்தை தரிசித்த பொழுது, மலையுச்சியிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அமைந்திருந்த 'பகவா லென” எனும் குகைச் சுவரின் கல்வெட்டொன்றை செதுக்கிவித்து, புனித தலத்துக்காக அறக்கொடையொன்றையும் அளித்தான். இதனருகில் பக்தி சிரத்தை வாய்ந்த முஸ்லிம் யாத்திரிகர் ஒருவரால் 12ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டொன்றும் உளது. அது வருமாறு;

'முஹம்மது ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் மனித குலத்தின் பிதா”

முதலாம் விஜயபாகு மன்னன் இங்கு யாத்திரிகர்களுக்காக ஓய்விடங்களை நிறுவினான். அவர்களுக்கு உணவளிக்கும் நோக்கமாக இரத்தினபுரி மாவட்டத்தில் நெல் வயல்கள் நிரம்பிய கிலிமலே கிராமத்தையும் வழங்கினான். இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் சிகரம் வரையிலான பாதைகளை சீர் செய்தான். ஆனால் முதலாம் இராஜசிங்ஹ மன்னனோ பௌத்த மதத்தினை ஒழித்துக்கட்டும் அவாவினால் இப்புனித தலத்தை இந்துக்கள் கையில் ஒப்படைத்தான்.


பாத மலையில் அமைந்திருந்த ஒரு கோவிலில் மதகுருவாக விளங்கிய செனரத் எனும் ஒருவனே தனது கசாய உடை களைந்து, தோனகதரினா என்பாளை மணந்து கண்டி மன்னன் ஆனான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம்
அக்காலத்திலேயே பாத சிகரத்தில் ஏறுவதானது மயிர் கூச்செறியும் ஓர் அனுபவமாகும். அது அதிக பலமும் முயற்சியும் தேவைப்படும் ஒரு செயல். சில சமயங்களில் மலையில் ஏறுவதென்பதே ஒரு வீரச் செயலாகும். ஏனெனில், தொங்கவிடப்பட்டுள்ள அங்கு மிங்கும் அசைந்தாடும் சங்கிலிகளினதும் கப்பிகளினதும் உதவி கொண்டு கரணமடிப்பது போல் ஆற்ற வேண்டிய ஒரு செய்கை அது.

இரவு நேரங்களில், வெள்ளையுடையணிந்து இளையோரும் முதியோருமாக எண்ணற்றோர் ஒடுங்கிய ஒற்றையடிப் பாதை மூலம் வளைந்து வளைந்து ஏறுவதானது ஓர் ஆனந்தக் காட்சியே. அவர்கள் எடுத்து செல்லும் தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் மனிதக் கண்ணாம் பூச்சிகளைப் போல் தோற்றமளிக்கின்றனர்.

இன்றோ இச்சிகரத்தில் ஏறுவது ஒரு களியாட்டப் பயணம் போன்றது. காரணம், யாத்திரிகர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் மெதுவாக, அதிக சிரமமின்றி களிப்புடன் மலையேறுகின்றனர். அவ்விதம் ஏறும்போதே அவர்கள் பக்திவசப்பட்டு பாடுவார்கள். அதே சமயம் பக்தியோடிழைந்த மேளங்களில் இடி முழக்கம் மலையுச்சியிலிருந்து காற்றிலே மிதந்து வரும்.

பொழுது புலருமுன்னர் மலையுச்சியை அடையும் ஒருவர் ஒரு வசீகரக் காட்சியில் கட்டுண்டு களிப்பார். கீழ் வானத்தில் கதிரவன் தோன்றும் போது, அருணோதயத்தின் அற்புதக் காட்சி அவன்முன் விரிகின்றது. திடுதிப்பென ஒளி பரவும் மெய் மறக்கும் அக்காட்சி, ஒளி வண்ணங்களின் கலவை, பல மைல்களுக்கப்பாலும் பரவும், இருண்ட நிழல், கம்பீரமாக நிற்கும் மலைகள், சமவெளிகள், அடர்ந்த காடுகள், பளிச்சிடும் நீரருவிகள், தென்னந் தோப்புக்கள் நிறைந்த அதி தூரத்திலுள்ள கரைகள் ஆகிய அனைத்தும் ஒருவனை வசீகரிக்காமல் விடுவதில்லை. அவன் இந்த ஊமை நாடகத்தின் அழகை வர்ணிக்கத் தவறவேமாட்டான்.

My Sincere Thanks To:

The National Archives, Sri Lanka.
The National Library, Sri Lanka

Reference:
The Ceylon Observer, Sunday press, 1966 April 19.
 

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger