Showing posts with label இலங்கை இந்திய முஸ்லிம் உறவு. Show all posts
Showing posts with label இலங்கை இந்திய முஸ்லிம் உறவு. Show all posts

ஆட்சி மாற்றமும் அணைக்கும் கரங்களும்

நாட்டின் புதிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவரது  ஆதரவாளர்களினால் 'பொது வேட்பாளர்' என்ற நாமத்தின் பெயரால்  கருணையின் வடிவாகவும் வெளிக்காட்டப்பட்டார். அவர் முந்தய சனாதிபதி மகிந்தவினால் புரியப்பட்டு வந்த சர்வாதிகார ஆட்சியினையும், ஊழல் நிறைந்த அரசாங்கத்தினையும் துவைத்து கறையகற்ற வந்தவர் என்ற பார்வையும் மக்களிடம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்தவினையும் அவரது அரசாங்கத்தினையும் பைத்தியத் தனமாக புகழ்பாடிய பல்வேறு ஊடகங்களும் தற்போது புதிய சனாதிபதியின் நாமத்தினை பாராயணம் செய்து வருகின்றன.

மகிந்தவின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த சனாதிபதி சிறிசேனா இலங்கையில் நாட்டினுள் வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளின் வருகையை எதிர்த்து போராடிய அன்றய நவ சமசமாஜ கட்சியின் முக்கியத்தவர்களுள் ஒருவர். யதார்த்தத்தில் அவர் ஒரு மத்தியதர வர்த்தின் நலனிலும், அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் ஆர்வமுடையவர். ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக அமெரிக்காவினால் வளர்த்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரத்துங்க, ரணில் விக்கரமசிங்க ஆகியோர் தூண்டப்பட்டு இடம்பெற்று வந்த போட்டி நிகழ்ச்சி திட்டத்தில் உலக ஏகாதிபத்திய அமெரிக்காவின் நல்லாசியுடன் கடந்த சனவரி மாதம் 8ம் திகதியன்று சிறிசேனா இலங்கை சனாதிபதி அதிகாரத்திற்கு உரித்துப் பெற்றுக் கொண்டார்.

சிறிசேனாவின் அரசியல் பிரவேசமானது 1960ம் ஆண்டின் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்டது. பொலன்நறுவை பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் இளைஞராக வளர்ந்து வருகின்ற அப்போது என். சுன்முகதாசனினால் வழிநடாத்தப்பட்டு வந்த மாவோயிச கம்மியுனிச கடட்சியில் இளைஞர் அணியில் சேர்ந்து கொண்டார். அக்காலப் பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மாவோயிச செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் மத்தியல் எழுச்சியும் ஆதரவும் இருந்தது. காரணம் 1964ம் ஆண்டுகளில் லங்கா சமசமாஜ கட்சியானது வீரியம் இழந்து அப்போது மத்திய தரவர்கத்தினர் மத்தியில் ஆதரவவினை பெற்று வந்த இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டது.

இத்தகைய சமசமாஜ கட்சியின் பின்னடைவினை தொடர்ந்தே சிங்கள தேசிய வாதத்தினை இளைறுர்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவென ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்கள் ஆயுத கலாச்சாரத்திற்கு ஊட்டம் செய்யப்பட்டார்கள். 1971ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி கட்சியானது அரசாங்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்ட போதே சிறிசேனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இக்காலப் பகுதியிலேயே சுமார் 15000 இளைஞர்கள் இராணவத்தினரால் அறுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிசேனா ஜே.வி.பியில் அப்போது அங்கத்தவராக இருந்தாரா என்பது தெளிவில்லை. சுமார் 15 மாதங்கள் தடுப்புக் காவலில் கடந்திவிட்டு 1972ம் ஆண்டில் சிறையிலிருந்து வnளிவந்ததும், சிறிசேனா இலங்கை சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.

சுதந்திரக் கட்சியில் நம்பிக்கைக்குரியவராக அவர் தொழிற்பட்டதன் காரணமாக அக்கட்சியில் அவருக்கு மென்மேலும் உயர்வுகள் கிடைத்தன. 1979ம் ஆண்டில் அதன் இளைஞர் அணிக்கு செயலாளராகவும், 1983 களில் அதன் இளைஞர்கள் முன்னணியின் தலைவராகவும் இருந்தார். 1989ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியீட்டி பாராளுமன்றம் நுளைந்தார். 1994 – 2001 ஆண்டு வரை அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவினது அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார். 2001ல் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை வென்றெடுக்க சற்று காலத்திற்கு முன்பதாகவே சிறிசேனா சுதந்திரக் கட்சியின் செயலாளராக அமர்த்தப்பட்டார். அண்மையில் சனாதிபதி மகிந்த நடந்து முடிந்த 2015 சனாதிபதி தேர்தல் அறிவித்த 2014 நவம்பர் 21ம் திகதி வரையில் சிறிசேனாவே செயலாளராக தொடர்ந்து 13 ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார்.

சனாதிபதி தேர்தலின் போது அனேக மக்களின் இரக்கத்தினை அள்ளிக்கொண்ட சிறிசேனா முந்தய ஆட்சியாளர்களான சந்திரிக்கா மற்றும் மகிந்தவின் காலத்தில் இடம்பெற்று வந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை, வாழ்க்கைத் தரம் மற்றும் சனநாயக உரிமைகள் பற்றி விமர்சித்து வந்தவர். இருப்பினும், சிங்கள தேசியவாதத்தின் அடக்கு முறை ஆட்சியினையும், விடுதலைப் புலிகளுடன் அரசு ஈடுபட்ட சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற அநியாயங்களையும், குற்றங்ககளையும் முழுமையாக ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

2005ம் ஆண்டில் மகிந்த ஆட்சிக்கு வந்த போது விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை சிறிசேனா வகித்து வந்தவர். 2010 ஆண்டிலிருந்து சனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மட்டும் சுகாதார அமைச்சராக இருந்தார்.
இவ்வருடம் சனவாரி மாதம் 2ம் திகதி டெய்லி மமிறர் பத்திரிகைக்கு வழங்கிய செயவ்வியில், விடுதலைப் புலிகளுடன் அரசாங்கமம் செய்து கொண்டிருந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை 2006ல் முடிவுறுத்திக் கொண்டு கொடிய யுத்தத்தினை மகிந்த முன்னெடுத்து சென்றிருந்த போது 6 தடவைகள் தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்ததாக ஒரு புளுகினை விட்டிருந்தார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட யுத்தத்தின் இறுதி இரு வாராங்களும் தானே பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்ததாக கூறியிருந்தார்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி இருவாரங்களிலும் ஆகக் குறைந்தது 40,000 தமிழ் பிரசைகள் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தாக ஐ.நா. சபையின் புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஈற்றில் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்கள் எதுவித பாராபட்சமும் இன்றி செல்வீச்சுகளுக்கு ஆட்பட்டு படுகொலை புரியப்பட்டிருந்தனர் என அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த நாட்களிலேயே சிறிசேனா தான் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக பணிபுரிந்த காலப்பகுதி என குறிப்பிட்டிருந்தார்.
 
சிறிசேனா கிராமத்து மக்களின் தோழனாக கருதப்பட்டு வருபவர். கிராமப் புறங்களில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதும், அவர்களின் வாழ்கைத் தரத்தினை மாற்றியமைப்பதும் அவருடைய அரசியல் குறிக்கோளாக இருந்து வந்தது. இருந்தும், அவர் விவசாய அமைச்சராக இருந்த போது மேட்டுக் குடி விவசாயிகளுக்கு சாதகமான போக்கினையே அவர் கடைப்பிடித்து வந்தார் என்பதும், விதை நெல் மற்றும் உரம் முதலியவற்றில் பல்தேசியக் கம்பனிகளுக்கு இருந்து வந்த வர்த்தக மேலாதிக்கத்தின இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை என்பது கய்க்கும் உண்மை. 2012ல் ஆயிரக்கணக்கான சாதாரண விவசாயிகள் நெல் விலையை உயர்த்தக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேனா அந்நடவடிக்கை அப்போதைய சனாதிபதி மகிந்தவினை தோற்கடிக்க சர்வதேசம் மேற்கொள்கின்ற சதி முயற்சி என வர்ணித்தார்.
 
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி யுத்த குற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அணுசரணையுடன் சர்வதேச சதியொன்று இலங்கை மீது இருந்து வந்தது. இதன் மூலம் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான உறவுகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினை அழித்தொழிக்க முயற்ச்சித்தது. மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் பின்புலத்துடன் நாட்டின் சனாதிபதியாக சிறிசேனா அமர்த்தப்பட்டார். இதன் மூலம் தற்போது இலங்கைத் தீவானது பீஜிங்கிலிருந்து அகன்று அமெரிக்காவுடனான தொடர்புகளை பலப்படுத்திக் கொண்டு வருகின்கிறது. ஆசியாவில் சினாவின் ஆதிக்கத்தினை தணித்து தன் அதிகராத்தினை வியாபித்துக் கொள்ள அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள திட்டம் இதுதான்.
 
சுகாதார அமைச்சராக 2010ம் ஆண்டிலிருந்து நவம்பர் 2014 வரையிலும், சுகாதார பணியாளர்கள் தமது நிலைகுறித்து மேற்கொண்ட அனைத்து பேராட்டங்களையும் மக்கள் மயப்படாத வகையில் கவனித்துக் கொணடவர். தனது அமைச்சின் ஊடாக வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் இடம்பெறா வகையில் அதற்கான நீதிமன்றின் உத்தரவினை பெற்றுக் கொண்டவர். 2014 ஆகஸ்டில் சுகாதார பணியாளர்கள் தமது படிகளை உயாத்தும் படி கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரவேசத்தை வைத்தியசாலைக்குள் அனுமதித்திருந்தார்.
 
இலங்கையின் கிராமப் புறங்கள் தோறும் சுமார் பத்து இலட்சம் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிப்புற்றுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பிரச்சினை பற்றி கவனமம் கொள்ளும் வகையில் சுத்தமான குடிநீர் விநியோகம், மனித உயிருக்கு பாதகமான இரசாயண வேதிப் பொருட்கள் முதலிய நிறுநீரக நோய்க்கு காரணமாய் அமைகின்ற விடயங்கள் குறித்து உல சுகாதா தாபனத்தினால் முன்மாழிவுகள் வைக்கப்பட்ட போது அதனை சிறிசேனா அதனை நிராகரித்திருந்தார்.
 
மகிந்தவினை ஆட்சியிலிருந்தும் விரட்ட சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் வாசிங்டனினாலும் தேர்வு செய்யப்பட்டவரோ சிறிசேனா. இஇதற்கு காரணம் அவர் பற்றிய கடந்த கால பதிவுகளாகும். அவர் அடக்கு முறைக்கு எதிராகவும், மத்தியதர வர்கத்தின் நலன் சார்பிலும் பாடுபடும் சேவகன். கடந்த 2014 நவம்பர் மாதம் அவர் தேர்தலில் போட்டியிட்டமையானது நீண்ட கால ஆலாசனைகளதும், திட்டத்தினதும் வெளிப்பாடு. 2011ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்க தூதுவராலயம் சிறிசேனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் மற்றும் அமெரிக்காவின் முகவர் நிறுவனமாக தொழிற்படுகின்ற ருளுயுஐனு என்பன இலங்கையில் இணைந்து செயலாற்றக் கூடிய நபராக சிறிசேனாவினை தெளிவாக அடையாளப்படுத்தியதன் விளைவாக 2013 ஜுன் மாதமளவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ''சுகாதார தலைமத்துவ பரிசிலினை' பெற்றுக் கொள்ள பயணமானார்.
 
சிறிசேனா அவருடை செவ்வியில், மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டும் விலகி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் 'பாராளுமன்றம், அமைச்சுக்கள், நீதிமன்ற்கள், இராணும் மற்றும் முழு அரச நிறுவனங்களும் மகிந்தவின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என விளக்கியிருந்தார். எனினும், அவை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது தெளிவு. பல்தேசிய கம்பனிகளின் முகவர்களும், உள்நாட்டு வர்த்தக வாணிப வர்கத்தினரும் மகிந்தவின் அரியணையை சூழக் காணப்ட்ட கூட்டத்தினருக்கும் பல்வேறு சொத்துக்களையும், செல்வங்களையும் பொற்கிளிகளாக வழங்கியே வந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பாகவும், இலங்கையின் கடந்தகால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்திற்குட்படுத்தவும் நாட்டில் ஏற்பட்டு வருகின்ற பாரிய சீன முதலீட்டு திட்டங்கள் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளை அளந்ததனால் நன்மையும் சிறிசேனாவுக்கு கிடைந்திருந்தது.
 
தற்போது சிறிசேனா சனாதிபதியாக அதிகராத்தில் அமர்த்தப்பட்டாயிற்று. வாசிங்டன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு என்பன அவரிடம் இருந்து கைமாறினை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சிறிசேனாவின் ஆட்சியானது சமாதானத்தினையோ, சுபீட்சத்தினையோ அல்லது சனநாயகத்தினையோ நாட்டில் நிலை நிறுத்தப் போவது கிடையாது. அவரின் பின்புலத்தில் இருக்கின்ற நபர்கள் யாவரும் விரும்புவது மத்திய வகுப்பு மற்றும் கிரமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை குன்றச் செய்து அதனால் இலாபம் ஈட்டுவதற்கும், திறந்த பொருளாதார கொள்கையை மேலும் தளர்த்தி ஓட்டையாக்கி ஏகாதிபத்திய முதலீட்டினை நாட்டிற்குள் அதிகரிப்பதற்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிய பசுபிக் பிராத்தியத்தில் சீனாவின்   பொருளாதார், இராஜ தந்திர தொடர்புகளை நசுக்குவதன் மூலம் இலங்கைத் தீவினை அமெரிக்காவின் வலைக்குள் சிக்க வைத்து அதன் வாயிலாக பிராந்திய ரீதியிலாக அமெரிக்க இராணுவ பலத்தை வலுப்படுத்துவதும், அதன் யுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துளைப்பு நல்குவதுமாகவே சிறிசேனாவின் நிருவாகம் அமையப் போகிறது.

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.

இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.


டச்சு காலத்து இலங்கை இந்திய முளிம்களின் மரக்கல வியாபாரம் 


வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்திலும், இலங்கையிலும்  உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.

இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.

தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கையில் வியாபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.

இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக இரு அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் இங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25  லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.

இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.

அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.

சமூக நீதி 
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger