ஒரு கன்னியின் வாழ்வை சீரழித்த வெளிநாட்டு பயணம்

நம் நாட்டை சேர்ந்த முஸ்லிம் சகோதரி ஒருவர் 2007ம் ஆண்டு குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றார். கடந்த இரு வருடமாக அவர் பற்றி எதுவித தகவலும் இல்லை. நீண்ட கால முயற்சியின் பின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாக அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போது அவர் தான் படும் துன்பங்கள் குறித்து தனது தந்தைக்கு எழுதிய கடிதமே இது. நலன் கருதி அவரது ஊர், பெயர் என்பவற்றை தவிர்த்துள்ளேன். எமது சகோதர சகோரிகள் பலருக்கு இதில் படிப்பினைகள் உண்டு என்பதனால் நானும் வாசித்த மடலை இங்கு தருகின்றேன்.

அன்புள்ள வாப்பாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் மகளாகிய நான் எழுதிக்கொள்வது, நான் நலமாக இருக்கிறேனோ இல்லையோ, நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கிக்கின்றேன்.

நான் வெளி நாடு வந்து ஐந்து வருடங்களாகின்றன. எனக்கு என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு என்ன ஆனது என்று எனக்கும் தெரியாது. நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ள எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் உங்களோடு எதுவித தொடர்பும் கொள்ள முடியாமல் நான் தடுக்கப்பட்டேன். நான் என்ன செய்வேன்? நான் ஒரு பெண், நான் கூண்டில் அடைபட்ட கைதியாய் கடந்த இரண்டு வடங்களாய் அல்லல் படுகின்றேன். நான் இங்கு உண்மையில் உயிரோடு இல்லை. உயிரற்ற வெறும் சடமாகத்தான் நடமாடிக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால் இதனை எழுதுவதெல்லாம் உங்களை மேலும் துயரப்படுத்துவதற்காக அல்ல. எனக்கு நடந்த நிலை, வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்.

வாப்பா! நான் வெளி நாடு செல்ல காலடி எடுத்து வைத்த நாள் முதலே என் அழிவும் ஆரம்பமானது. நான் அன்று முதலே கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கினேன். அன்று நீங்கள் அந்த ஏஜன்சியுடன் என்னை ஏயர்போட்டுக்கு அழைத்து சென்றீர்கள். ஏயர்போட்டின் உள்ளே நுழைந்ததும் என்னை நீங்கள் கட்டியணைத்து, கண்ணீர் மல்க அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் யாரும் என்னோடு உள்ளே வரவில்லை. அவன் மட்டும்தான் என்னோடு வந்தான். என்னை ஓரிடத்தில் வைத்துவிட்டு அங்குமிங்குமாக ஓடித்திரிந்தான். ஓர் அரை மணி நேரம் கழித்து வந்து 'இன்றைக்கு உனக்கு பிளைட் இல்லையாம் நாளைக்குத்தான் போகலாமாம் என்ன செய்யிறது” எனக் கேட்டதும் எனக்கு இடி விழுந்தது போல இருந்தது. எல்லோரும் போயிட்டாங்க நாம் மட்டும் தனிய இவனோட என்ன செய்வது என யோசித்துக் பொண்டிருந்த போது 'வாங்க லொஜ்ஜுக்கு போயிட்டு நாளைக்கு வருவோம்” என்று என்னை கூட்டிக் கொண்டு மருதானையில் நாங்கள் முதல் நின்ற லொஜ்ஜுக்கு அழைத்து போனான். எனக்கு பயம்தான் வந்தது. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 'எனக்கு தனி றூம் எடுத்து தாங்க என்று கேட்டேன்” அவன் முன்னுக்கு போய் வந்து ' ரூம் எல்லாம் புக்கிங்காம், இது மட்டும்தான் இருக்காம், என்ன செய்றது பார்த்து அஜஸ் பண்ணுவோம்” என்றான். என்னால் தனிய இருக்க முடியவில்லை. ஒரே பயமாக இருந்தது. நான் நினைத்தது போல் நடந்தது. அன்றிரவு அவன் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டான் வாப்பா. நான் கெஞ்சியும் கதறியும் அவன் என்னை விடவில்லை. என்னை கலியாணம் முடிப்பதாகச் சொன்னான். அவனுக்கு ஏற்கனவே மனைவியும் பிள்ளைகளும் இருப்பது எனக்கு தெரியும். நாசமாகிப் போன எனது வாழ்க்கைக்காக தலையசைத்தேன். அவன் சொன்னது போல் வெளிநாடு செல்ல என்னை மறு நாள் அழைத்து செல்லவில்லை. என்னை வெளிநாட்டுக்கு அனுப்பு அல்லது கலியாணம் முடி என்று அவனின் காலில் விழுந்து கெஞ்சினேன். அன்று பின்னேரம் கலியாணம் முடிப்பதாக கூறி வீடொன்றுக்கு அழைத்து சென்றான். அங்கே மிச்ச நேரம் காத்திருந்த பிறகு இரண்டு பேர் வந்து பேர், ஊர் எல்லாம் கேட்டு எழுதினார்கள். கலியாணம் முடிந்துவிட்டதாக சொன்னார்கள். பின்னர் றூமுக்கு வந்து மூன்று நாள் அங்கிருந்தேன். கணவன் மனைவியாக அழுத கண்ணீருடன் காலம் கழித்தேன். அன்று மாலை வெளிநாடு செல்வதற்காக எயர்போட்டுக்கு அழைத்து சென்று என்னை அனுப்பிவைத்தான். களியாணம் என்பது வெறும் செட்டப் என்பது பிறகுதான் தெரிந்தது.

வாப்பா! நான் அழுதுகொண்டுதான் இந்த கடிதத்தை எழுதுகின்றேன். என்னை நீங்கள் எப்படியெல்லாம் வளர்த்தீர்கள். அவ்வளவு படிக்க வைக்காட்டியும் நல்ல ஒழுக்கத்துடந்;தானே வளர்த்தீர்கள். வீட்ட விட்டு எங்கும்; செல்ல அனுமதிக்கமாட்டீர்கள். றோட்டை கூட எட்டிப்பார்க்க விடமாட்டீர்கள். அப்படி வளர்த்த நீங்கள் சீதனத்திற்காக வேண்டி பணம் சம்பாதிக்க ஆயிரக்கணக்கான மைல் தாண்டி இங்கே அனுப்பி வைத்தீர்கள். நான் யார் காவலில் வந்தேன். கொழும்பு ஏயர்போட் வரை வந்த நீங்கள் நான் வெளிநாடு சென்றதாக நினைத்து சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ஓநாய் என் வாழ்க்கையை நாசமாக்க திட்டமிட்டு அவன் எனக்கு டிக்கட் ஓக்கே பண்ணாமல் சும்மா வந்திருக்கிறான். இப்படி எனக்கு மட்டுமல்ல, வெளிநாடு வரும் பல அப்பாவி பெண்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்பது பின்னர்தான் எனக்கு தெரியும்.

வாப்பா! நான் உங்களிடம் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். இதன் பிறகு தங்கச்சிமார் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம். நான் பட்ட அவமானம் போதும்! என் வாழ்க்கை நாசமானது போன்று என் சகோதரிகளது வாழ்வும் நாசமாக காரணமாகிவிடாதீர்கள். ஊரில் பிச்சை எடுத்து திண்டாலும் மானம் மரியாதையாக வாழ்வோம். அல்லது இப்படி வந்து மானம் இழந்து வாழ்வதை விட செத்து மடிவது நல்லது.

வாப்பா! அங்கு மட்டும் கொடுமை நடக்கவில்லை. இங்கும்தான் கொடுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வீட்டுக்காரன் ஒரு கிழவன். அவனுக்கு நான்கு மனைவிமார். கடைசி மனைவிதான் நான் இருக்கும் வீட்டுக்காரி. மூத்த மனைவி மரணித்து விட்டாள். மற்ற மூன்று மனைவிமாரினது வீட்டிலும் மாறி மாறி மிசினாய் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். மரணித்த மனைவியின் வீட்டுக்கு செல்வேன். அங்கே இரண்டு பெரிய பெண்கள் இருக்கிறார்கள். சில இடங்களில் எனக்கு சரியாக சாப்பாடு தரமாட்டார்கள். உடுக்க உடுப்பு கிடைக்காது. நான்தான் காசு கொடுத்து உடுப்பு வாங்குவேன். சில நேரம் வேலை செய்ய நான் மறுத்தால் கொடுமைப்படுத்துவார்கள். ஆடு மாடுகளுக்கு அடிப்பது போல் அடிப்பார்கள். நோய் வந்தாலும் மருந்து எடுத்தரவோ, ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவோ மாட்டார்கள். நோய், பசியாறாது அவர்களுக்கு நான் எப்போதும் நான் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். சம்பளம் கூட ஒழுங்காக தருவதில்லை. மொத்தத்தில் அவர்கள் மனிதர்களல்ல, காட்டுமிராண்டிகளுக்கு பணிவிடை செய்வதற்காகவே நான் இங்கு கற்பிழந்து கடல் கடந்து வந்திருக்கின்றேன். நான் படும் வேதனைகளை சொல்லி அழ எனக்கு யாருமில்லை. நம் நாட்டை சேர்ந்த மற்றவர்களை சந்திக்க கிடைப்பது எனக்கு மிக அபூர்வம். யாரையும் சந்திக்க முடியாது. என்னை ஒரு கைதியாகவே நடாத்தினார்கள். சில சிங்களப் பெண்களை சந்திக்க கிடைத்தது. எனது பிரச்சினைகளை சொல்ல எனக்கு சிங்களம் தெரியாது. என் நிலமையை புரிந்துகொள்ள அவர்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் பரிந்தது. அவர்களில் சிலரும் எனது கொடுமையை அனுபவிக்கிறார்கள். பணம் வேண்டும் என்றால் எல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்கிறார்கள்.

வாப்பா! இந்த கொடுமைகள் எல்லாம் எனக்கு பெரிதல்ல. இதுவெல்லாம் எனக்கு மிகவும் சாதாரணமாக போய்விட்டது. எனக்கு நடக்கும் இன்னொரு கொடுமையை நினைக்கும் போதுதான் நான் ஏன் இன்னும் உயிர் வாழ்கின்றேன் என்று எண்ணத் தோன்றும். எனது கிழவனின் மனைவியருடைய ஆண்பிள்ளைகளது இம்சைதான்; அது. வாப்பாவுக்கு அதையெல்லாம் எழுதுவதையிட்டு நான் கூச்சப்படுகின்றேன். இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்பதற்காகவே நான் சொல்கின்றேன். என்னை அவர்கள் எனது அறையில் தூங்க விடுகிறார்களில்லை. ஆள்மாறி ஆள் வந்து கொடுமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நான் அதனை அவர்களது தாய் மாரிடத்தில் சொன்னாலும் இலேசாக கண்டிப்பதோடு விட்டுவிடுகின்றார்கள். அவர்கள் இல்லாத நேரமாக வந்து கொடுமைப்படுத்துகின்றார்கள்.

எனது வீட்டில் எமது நாட்டை சேர்ந்த, ஏன் எமது சமுகத்தை சேர்ந்த ஒரு ட்றவைர் இருக்கின்றான். அவனும் ஒரு ஈவிரக்கமற்றவன். அவனும் பெண் பித்தன் அவர்களது நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றான். எனது வீட்டுக்கிழவனின் கடைசி மனைவி ஒரு இளம் பெண். அதிக மகருக்கு அவளது தந்தை அவளை விற்றிருக்கின்றான். அவள் இந்த ட்றைவரைத்தான் வைத்திருக்கின்றான். கிழவன் இல்லாத நேரம் பார்த்து இருவரும் வேண்டிய இடமெல்லாம் போய் வருவார்கள். அவளை அவன் அனுபவிப்பதற்காக வேண்டி அறபியின் ஆண்பிள்ளைகள் என்னை கொடுமைப்படுத்துவதனை அவன் கண்டுகொள்வதில்லை. எனக்கு நிகழும் கொடுமைகளை அவனிடம் எடுத்து சொன்ன போது 'தொழில் என்று வந்தால் எல்லாம் வரும்தான் நாம் பார்த்து அஜஸ் பண்ணி நடக்க வேண்டும்” என்று சொன்னான். நான் குவைத்திற்கு வந்த பிறகு 11 இலங்கைப் பெண்களுடன் தனக்கு உறவு இருப்பதாக பெருமையாக சொல்கிறான். வெட்கம் கெட்டவன். அதன் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது நம் நாட்டு பெண்கள் சிலர் அதனை இங்கு தொழிலாக செய்கிறார்கள் என்று. வீடுகளை விட்டு வெளியே பாய்ந்து றூம்களை வாடகைக்கு எடுத்து கொண்டு தொழில் செய்து வருகின்றார்கள். பலர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஆண்களோடு குடும்பம் நடாத்தி பிள்ளையும் பெற்றிருக்கிறார்கள். தனது நிலை மட்டுமல்ல பல ட்றவைர்மார் இங்கு பணமும் பெண்ணுமாகத்தான் வாழ்கின்றார்கள் என்று கூறினான் அந்த கேடு கெட்டவன்.

வாப்பா! இப்போதுதான் எனக்கு புரிகின்றது நம் நாட்டிற்கு பிள்ளை வயிற்றோடு வந்த யுவதிகள் நிலையும், பத்துப் பன்னிரண்டு வருடமாகியும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் பெண்களின், இன்னும் ஒரு தகவலும் இல்லாமல் வாழும் பெண்களின் நிலையும் என்னவென்று இப்போது எனக்கு புரிகின்றது. வீடு கட்டவும் காசு பணம் சேர்க்கவும் என பலர் இங்கு வருகின்றார்கள். சிலரது வாழ்வு இப்படியான நிலைக்கு தள்ளப்படுகின்றது. வேறு சிலர் இத்தகைய சூழ்நிலைகளை வேண்டி, விரும்பி தேடி எடுத்துக்கொள்கின்றார்கள். இங்கு உல்லாசமாக வாழ்கின்றார்கள். நாட்டுக்கு மானம் மரியாதையுடயவர்கள் போன்று திரும்பி வருகின்றார்கள். இங்கு பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றார்கள். இத்தகைய நிலைக்கு இழுத்து செல்லப்படுகின்றார்கள். இவர்களில் சிலர் எம்பசிக்கு தப்பியோடி தமக்கு நடந்தவற்றை விளக்கியிருக்கிறார்கள். சிலருக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது. வேறு சிலர் எம்பசிகளில் தங்க வைக்கப்பட்டு வீடுகளில் நடந்ததை விட மிக மோசமான நிலையில் நடாத்தப்படுகின்றார்கள். சிலர் வேறு நாடுகளுக்கு விற்கப்படுகின்றார்கள் என்பதனை அறிந்த போது நான் திடுக்கிட்டுப் போனேன்.

நான் இவ்வாறு கூறுவதிலிருந்து இங்குள்ளவர்கள் எல்லோரும் அப்படித்தான், இங்கு வருபவர்களும் அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இங்கு நாம் வாழ்க்கையில் காணாத மிக மிக நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எனது வீட்டுக்காரனின் இரண்டாவது மனைவியின் சகோதரர் ஒரு 'முத்தவ்வா”. நல்ல பழக்கமும் நன்னடத்தையும் உடையவர். இவரது சகோதரி, அதான் இரன்டாவது மனைவி மிக நல்லவர். எனது பிரச்சினைகளையெல்லாம் அவரிடத்தில் சொல்லியதனால் எனக்கு அவரது மற்றொரு சகோதரர் வீட்டில் வேலை வாங்கி தந்துள்ளார். இப்போது எனக்கு பழைய பிரச்சினைகள் ஒன்றுமில்லை. நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். என்றாலும் நான் மோசமாய்ப் போய்விட்டேன் என்பது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு யார் காரணம்? எனக்கு நீங்கள் கலியாணம் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தானே என்னை வெளிநாடு அனுப்ப முடிவெடுத்தீர்கள். மகள் உழைத்து அனுப்ப நான் நல்ல, அழகான வீடு கட்டியதும் நல்ல நல்ல மாப்பிள்ளைகளெல்லாம் வரும். அப்போது என் மகளுக்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளையை எடுத்துக் கொடுத்தால் மகள் சந்தோசமாக வாழும் என்ற மனக்கோட்டைதானே உங்களை இந்த முடிவெடுக்க வைத்தது.

குழந்தை பருவத்திலிருந்து வயதாகும் வரை என்னை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த உங்களுக்கு இறுதிக் கட்டத்தில் வந்த மோசமான உடல் நிலைதானே உங்களை இந்த முடிவுக்கு வர வைத்தது.

நீங்கள் சுகவீனமுற்று விட்டீர்கள் என்று தெரிந்தும், உங்களிடமும் காணி, பூமி, பணம், நகை,வீடு என சீதனம் கேட்டு உங்களை தர்ம சங்கடத்திற்குள்ளாக்கிய அந்த நம்மூர் மாப்பிள்ளை மார்தான் இந்த பாவத்துக்கெல்லாம் காரணம். எனது இந்த புழுங்கல் நிச்சயமாக அவர்களை சும்மா விட்டுவிடாது. அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்வான்.

அதேபோல, நாட்டிலிருந்து இங்கு வந்த சிலர் மானம், மரியாதையுடன் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். எல்லாம் அவர்களுக்கு அமையும் சூழலைப் பொறுத்து வாப்பா! நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் நமது பிள்ளைகள் யாரையும் இங்கு அனுப்ப வேண்டாம். கஞ்சி குடித்தாலும், குச்சி வீட்டில் வாழ்ந்தாலும் மானம் மரியாதையோடு வாழ்வோம். அல்லது இங்கு வந்து கற்பிழந்து மானமிழந்து வாழ்வதைவிட செத்து மடிவோம்.

வாப்பா நிறைய விடயங்களை நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது மடல் கண்டு ஆனந்தத்துடன் பிரித்திருப்பீர்கள். இவ்வளவு சோகம் இருக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். எனக்காக நீங்கள் யாரும் அழவேண்டாம். நான் தேவையான அளவு அழுதுவிட்டேன். எல்லோருக்குமாக சேர்த்துக்கூட நான் அழுதுவிட்டேன். ஆனால் என்னைப் போல் யாரும் இதன் பிறகு அழக்கூடாது. நீங்கள் அழவவைக்கவும் கூடாது. நான் இத்துடன் எனது கண்ணீர் மடலை முடிக்கிறேன்.

வஸ்ஸலாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்.

Moorish Connection...India

The Ceylon moor link with india is not only through three saints but also through the steady stream of missionaries and devines who regularly visited Sri Lanka, and the visits of Ceylon Moors and other Muslims to the “Darghas” or shrine of saints in India.

For ever 90 years the muslims spiritual society, Colombo since iits establishment in 1884 has been reciting mawloods for ten days during the muslim month of Jamad-Ul-Akhir right up to the present day.it is in honour of the muslim saint of Nagore Sheik Shahul Hamid Magore Meeran Sahib. During this ten days period in that month the pilgrimage is made to the saint’s “Dargha” in Nagore. “Going to Nagore” is a popular phrase heard when the muslim month of Jamad-ul-Akhir approaches.

The saint visited to Sri Lanka on missionary work. On one of his viisiits here hhe was accompanied by Seyyad Shihabuddeen Oli-ullah and they made the trip to Adam’s Peak through ardous jungle paths beset by wild beasts. When they returned the Nagore saint returned to South India but the other saint, Seyyad Shihabudeen Oli-ullah, attracted by the scenic beauty of Sri Lanka and the Sylvan repositories it afforded for meditation and prayer, decided to stay back. His place of Meditation is the very spot on which the Meeran Maccan Mosque in Kandy now stands.

Yet another South Indian saint who visited Sri Lanka – in more recent times was his Hliness Al-haj Habeeb Mohamed Sathakathullah sahibo Oilullah Kilakarai, popularly known as Pallak Auliya.

He first visited Sri Lanka in his boyhood in the company of the muslimm savant and theologian, Al-Haj Seyed Mohamed Mapillai Alim Sahib, in 1932 he visited Sri Lanka and stayed for three months and again in 1936 he was here for a month (he was then 104 years old). His Sri Lanks host, Mr.A.M.Hasheem as directed by the saint, had mawlood recited in honour of the Holy Prophet Muhammad year after year without a break. It is been continued even now by his children.

Moorish Connection...Oman and Yemen

The Arabian author of the Middle Ages, Edrisi (1154 A.D) in his description of Sri Lanka or serendib says that “the natives of Oman and Yemen resorted to Lanka for making Cordage from the coconut.”

Besides the writer Edirisi’s reference to natives of Yemen (and Omaan) seeking to make cordage from the husks of the coconut in Sri Lanka, (see earlier reference) Yemen is linked to Sri Lanka by the visit of two Yemeni saints- sheikh Ismail Imam Izzadeen Yemeni (Arabu Appa) and As-sheikh Abdullah Ibn Omar Baadheef Yamanee Oliullah.

Izzadeen Yemeni (Arabi Appa) was a direct descendant of the Holy Prophet Muhammad’s Uncle, Abbas, and was a sheikh of the shazuliya Thareek. He married a direct descendent of the Holy Prophet’s companion and first caliph of Islam Abu bakr. Arabi Appa and a friend Mohamed Cassim Bhai of India, a wealthy businessman, were travelling by ship to serendib (Srilanka) when heavy seas caused shipwreck. Floating on planks these two survivors managed to land safely at weligama in the South of Srilanka.

Arabi Appa resided at weligama and when he died hhe was buried in the courtyard of the Mosque at station Road, Weligama. On the day that Arabi died, a relative from Yemen visited him and when told that the saint was dead he is reported to have said; “He will not die,” and nearing the corpse lifted the shroud covering his face and recited a verse. Arabi Appa opened and closed his eyes three times.

It is said that when the Muslims of Matara wanted to build a shrine the saint appeared to one of them in a dream and asked that honour be reserved for hi son, Hajiyar Appa, who is himself revered as a saint. Stories are told of how the latter by his pious recitation coaxed a charging elephant and an infuriated buffalo to retreat meekly.

Hajiyar Appa was a savant, who wrote among other works, the holy Quran with his own hands. Once when he was writing the pen was wrenched from his hand and fell off. “that’s the end” he said ominously and he died after an illness of 40 days on Friday March 2,1882 and was buried before Jumma prayers close to his house at Matara.

The other Yemeni saint, As-Sheikh Abdullah Ibn Omar Baadheef Yamanee Oliullah is said to have arrived in Sri Lanka on May 27, 1840 from yemen, returned in 1850, and was back in Sri Lanka in 1858. He died in his country on January 14, 1892. A woollen robe (Jubba) worn by him is still found in Kahata Owita, off veyangoda where his resting place is. Annual commemorative recitals of Rathib and Mawlood still take place at New Moor Street, Colombo and Kahata Owita on the 14th day of the month of Jamadhil Akhir since his demise.

He was reputed to turn baser metals into gold by herbal treatment- enough gold only to meet his bare necessities. He used to make periodical visits from Colombo to Kahata Owita, then a jungle, for this purpose. Before coming to Sri Lanka this mystic and sufi was Professor of Theology and Sufism at the Al- Azhar University at Cairo.

சீதனம் கேட்டா எண்ட சிங்காரிக்கி பிடிக்காதாம்.

[பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் சோனக மொழியிலமைந்தவை.,யாவும் கற்பனையே]

இருபது வயசில காதலிச்சன்.
அவளுக்கு பதினேழுதான் ஆகிருந்த.
அப்ப யெல்லாம் சும்மா பஞ்சி பஞ்சா கதப்பாள்.
ஈர நெஞ்ச அலப்பாள்.
இப்ப யெல்லாம் நான் அஞ்சி யஞ்சி கதக்கன்.
அவள் வஞ்சி வஞ்சி சினப்பாள்.

கண்ணால பேசின காலமெல்லாம் பெய்த்து.
கையால பேசுவாளாம் ங்காள்.
கேக்கச் செல்லி ஆர செல்ற,
கேட்டுப்போட்டா நாம எல்லாம் செஞ்சம்.

கஞ்சிக்கி வக்கி ல்லாட்டியும்
மத்தவண்ட காசில வாழப்போடா ண்டு
செல்லிச் செல்லி வளத்ததால,
பள்ளிக்கி போகக்கொள காசில ஆசை யில்ல.
பள்ளில படிக்ககொள பாவி மகளோட பழயினது
பொழையா பெய்த்து.
பள்ளிக்குள்ள ஒரயொரய கண்டு கதச்சத்தால
கவுந்திட்டன்.

சீமக்கி படிக்க வரக்கொள
வழியில வந்து நிண்டு சிரிச்சாள்.
சிரிச்சழுத மந்திரம் இப்பதான் விளங்குது.
அப்ப அழகான காசிக்கார ஒண்ட பாத்தா
நல்ல தொழில் கிடக்காட்டியும்
கனக்க காசி கிடைக்கு முண்டு நினச்சன்.
அதோட மாமாக்காரன் கை நிறய ஆதனமும்,
வாழ்க்க நிறய சீதனமும் தருவானுண்டுலா
அவள எண்ட கைக்குள்ள போட்டன்.
இப்ப என்னண்டா அவள்ர காலுக் கடியிலலா
என்ன போடப்பாக்காள்.

அப்சயர் ஊடும், வளச்சி கல்லுச் செவரும்,
நாப்பது ஏக்கர் பூமியும்,
நடுவுல ஒரு தோப்பும்,
மெயின் றோட்டு ஓரத்தில
முண்டு அறயில கடயும்,
அதோட அறுபதடி வளவும்,
அவள ஏத்திக்கிட்டு போக காரும்,
கெடக்கி மெண்டுதான சீமக்கி படிக்க வந்தன்.
மாமாக்காரன் மோட்ட பைக்கலும்
வாங்கித் தருவானுண்டுலா நெனச்சன்.

கனவெல்லாத்தயும் கலக்கிரமாரிலா
இப்ப கதக்காள்.
இதெல்லாம் ஆருக்கெண்டு
அவளுக்கு தெரியாதா?
மச்சான் நான் சாகக்கொள
சந்தக்கொடயா கொண்டு போப்புறன்.

என்ட மயிலழகி,
மாங்கனி மச்சி – நீ
பொர்ற புள்ளயலுக்குத்தனே
புறிக்கப் போறன்.
விளங்காத முண்டக்கண்ணி
ஏன் முனுமுனுக்காள்.

அவளுக்கெங்க தெரியும்,
எங்கு வாப்பாலா சென்னாரு,
அவ் அப்பாக்கிட்ட யிருந்து,
அவ் வாப்பா வறுகினது எக்கச் சக்கமுண்டு.
இவள், அவ் வாப்பா சொந்தமா ஒழச்சதுண்டுலா
நினச்சிருக்காள்.
அவ் சின்னம்மாக்கு ஊடு கட்ட வளவில்லண்டு
அவ் அப்பா கேக்கக் கொள,
இவஉ வாப்பா ஒரு பத்திர கொத்தும்
தரமாட்ட னிண்டயாம்.

நான் சீமக்கி வந்ந பொறகு,
எத்தன பேரு என்ன கேட்டு வந்தண்டு
இவளுக்கு தெரியுமா?
கேட்ட அத்தன யோடயும் மகளையும்
தாறனுண்டு லைன்லலா நிண்ட ஆக்கள்.
நாம முடிக்கிரண்டா அவளத்தா னுண்டு,
அவள்ர கன்னத்துல விழ்ர குழிக்கித்தான
காத்துக் கிடந்த.
இப்ப அவள் பேசுறத கேட்டா
ஈரக் கொலலா நடுங்குது.

சட்டம் படிச்சிப் போட்டு,
சதக்காசி ல்லாம களியாணம் முடிச்சா,
சனம் நம்மள என்னத்த மதிப்பான்.
அபுல் போடிட மகன் அசன்
இஞ்சினியறுக்கு படிச்சவன்,
இஸ்லாத்த பேசித் திரிஞ்சத்தால,
இப்ப அவண்ட பொண்டாட்டிய
பஸ்சிலலா ஏத்திக் கிட்டு போறான்.
நம்மிட காச சும்மா ஏன் பஸ்சிக்கும்
ஆட்டோக் காரனுக்கும் கொடுக்கணும்.
இவளுக்கு இதல்லாம் விளங்கிற ல்லியா?
எப்படி நினச்சிக் கிட்டிருந்த எனக்கி,
இப்படிலா செஞ்சி போட்டாள்.
அவள்ர அழகுல மயங்கினத்த
ஆத்துல போய் விழுந் திரிக்கலாம்.

கடசில அவள்ர மண்டக்கி ஒண்டும்
விளங்காம போக – நானும்
வேற வழியில்லாம,
எல்லாத்தயும் எண்ட பேர்ல எழுதாட்டியும்,
ஓண்ட பேர்ல எழுதி வாங் கிண்டன்.
எண்ட பேர்ல எழுதி வாங்கி
என்ன செய்ய,
எல்லாம் நம்மிட தானே யெங்காள்.

இவளுக் கென்ன தெரியும்,
அவள்ர வாப்பாக் காரன் போனத்துக்கு
பொறகு,
காக்கா காரனும் தம்பிமாரும் சேந்து
என்ன செய்வானுக ளுண்டு.
அவனுகள்ர பேர்ல எல்லாத்தையும் எழுதிப்போட்டு,
பள்ளக் காட்டு பூமிய மட்டும்
இவளுக்கு கொடுப்பானுகள்.

ஓண்டும் விளங்கு தில்ல இவளுக்கு.
எடுக்கிற சம்பளத்த
எத்தன நாளக்கி செலவளிக்கலாம்.
பூமி கொஞ்சம் இருந்தாத் தானே
குத்தகைக்கி கொடுத்தாச்சும் ஒழக்கலாம்.
துகைன் மெனஜர்ர மருமகன்
ஓட்டாண்டியா திரிஞ்சா,
மாமாக் காராள ஊரில யிருக்கிறவன்
என்னத்த கதப்பான்.

இதுக் கங்கால அடுத்த பிரச்சன,
இவள்ள இந்த கத யெல்லாம்
எங்கு வாப்பாக்கு தெரியா.
ஏன்ன கேட்டு வரக் கொள யெல்லாம்
நான் பிடிச்சது புளியங் கொம்பு ண்டு நெனச்சித்தான்
பேசாம ருந்தாரு.
இது அவருக்கு தெரிஞ்சா
வேற பொண்தான், வேற வழியில்ல.

இந்த காதல் கத்தரிக் காயெல்லாம்
அவருக்கு தெரியாது.
என்ன படிப்பிச்ச காசெல்லாம்
பேங்கு புத்தகத்தில போட்டு வெச்ச மாரி,
ஒரே யடியா களத்து றத்துக்கு,
எப்பண்டு க்கிட்டிருக்காரு.
சீதனம் வாங்காட்டி ஊருல இருக்கிற
மதிப்பு கொறஞ் சிடுமாம்.
சீதனமா வாங்குற காசி முப்பது லெட்சத்துல
கொழும்புல ஊடு ஒண்டு வாங்கினா
வாடகைக்கி கொடுக்கலாம், அதோட
நாம போனாலும் நிண்டு வாறத்துக்கு
இடம் ஒண்டிருக்கு மெண்டு செல்லுவாரு.

எங்கு உம்மாட கத அது வேற.
பக்கத் தூட்டு சக்கினா லாத்தாவும்,
செமிலத்து ம்மம்மாவும்,
பாத்துட்டு வந்த பொண்ணு,
அவ்வளவு அழகி ல்லாட்டியும்,
கொழுப்புல ஒரு ஊடும், நல்ல ஆதனமும்,
குடும்பத்துல நல்ல அன்புமிருக்கா மிண்டு
ஒரே முனு முனுப்பு.
தாங்கேலாம யிருக்கு.

இதெல்லாம் எண்ட சீறிப் பாயிர
சிங்காரிக்கி தெரியுமா?
உங்கட படிப்பு எப்ப முடியுது,
எப்ப முடியுது ண்டு அரிக்கிறவள்,
இப்ப மொறச்சிலா பாக்காள்.
மொறச்சி பாத்தாலும்,
முத்துப் போலத்தா னிரிக்காள்.
இப்ப அவ் உம்மா வாப்பாட செல்ல கேட்டு,
வெறச்சிப் போய்லா கதக்காள்.

இதுக் கெடயால எங்கு மாமா,
சாப்பிர்ற நேரம் போனா,
மத்த நேரமெல்லாம் எங்கிட ஊட்டான் கிடக்காரு.
இந்த பிரச்சன யெல்லாத்தயும் வெச்சி,
அவர்ர மகள்ர தலயில என்ன கட்டியு ர்றத்துக்கு
பாக்காரு.

எங்கு வாப்பா,
சீதனமி ல்லாம பொண் ணெடுக்க விருப்பமில்லாம,
முன்னய, அவருக் கிட்ட 'குடும்பத்தில பொண் ணெடுத்தா
கொதறத்து கூட' ண்டு சொன்னாலும்,
கேக்கிற மாரித் தெரியல்ல.
அடிக்கடி செப்பு பேக்கு தூள் கிளம்புது.
ஒறவு முறிஞ்சா செப்பெல்லாம் திரும்ப கட்டணு முண்டு
எங்கு ம்மாக்கு பெரிய தலயிடி.

ஆதனாலதான், எண்ட அவள்ர ஊட்டுல யிருந்து
யாரையும் இப்ப வர வேணா முண்டு செல்லிரிக்கா
எங்கு ம்மா.
இதெல்லாம் தெரியாம இவள்,
திரும்ப திரும்ப இதப் பத்தி பேசினா
கலியாணமே எனக்கி வேணா முண்டுலா
செல்றாள்.
காதலிச்ச பாவத்துக்கு நம்மிட கதி
இப்படித்தான் போகணு முண்டு எழுதியிருக்கு.
ம்......காதலிக்காம யிருந்திருந்தா ஒரு கதையு மில்ல,சொள சொளயா வாங்கி யிரிக்கலாம்.

தௌஹீதும் அத்வைதமும் ஒன்றா?

கடந்த றமழான் காலப்பகுதியில் வழமை போன்று எமது ஊர்களிலெல்லாம் சன்மார்க்க உபன்னியாசங்கள் களைகட்டியிருந்தன. சொற்பமானோர் வழமைக்கு மாறாக தமது நேரத்தினை மார்க்க விடயங்களில் செலவு செய்வதாக கூறிக்கொண்டு றமாழானின் புனிதத்தினையே கெடுத்துவிடுவது எமது ஊர்களில் இருக்கின்ற மார்க்கத்தினை முறையாக கற்றதாக கூறிக்கொள்கின்றவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு எனது பிறந்த இடமும் விதிவிலக்கல்ல. சன்மார்க்க ஒன்று கூடல் என்ற பெயரில் வெறும் வம்பளப்புக்களும், மறுபுறத்தில் தூய்மையான இஸ்லாத்தின் பிறப்பிடம் என பிதற்றிக்கொண்டு அதன் தூய்மையையே தோசமாக மாற்றிவிடவும் எனது ஊரில் பெரும்பான்மை போதகர்கள் இருக்கிறார்கள். வேடிக்கை என்னவெனில் சுடச்சுட பதில் கொடுக்கும் இவ்விரு தரப்பினரும் சில வேளை சில விடயங்களை கண்டும் காணாமலும் சூடாற விட்டுவிடுவார்கள். அதனை நியாயப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

இப்படித்தான் இவர்களது வார்த்தைகளில் பிரயோகித்த விடயமொன்றினையே கீழே குறிப்பிட்டுள்ளேன். இது பற்றி எதிர்த்தரப்பிலிருந்து எதுவித மறுப்புக்களும் வெளியாகவில்லை. வெறுமனே அத்துண்டுப்பிரசுரத்தின் எல்லா விடயங்களுக்கும் மறுப்பினை வழங்க தயங்காத அவர்கள், குறிப்பாக மிம்பர் மேடைகளையே இதற்காக பயன்படுத்த சிறிதும் தயங்காத இவர்கள் இதற்கான எந்தத் தெளிவினையும் மக்கள் முன் வைக்க இதுவரை தயாராகவில்லை. சில வேளை கடந்த கால சில சம்பவங்கள் அவர்களை இத்தகைய மௌனாஞ்சலிக்கு உட்படுத்தியிருக்கலாம் என்ற வாதத்தை நாம் மறுப்போமானால் இதுபற்றி அவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் குறிப்பிட்டாக வேண்டியிருக்கின்றது. அவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமிய சன்மார்க்கத்தினை போதிக்கும் வண்ணமான அரை குறை அறிவே அவர்களிடம் உண்டு என்பதனையும், எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதனையும் அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றது எனலாம்.

"தௌஹீது வாதிகள் என்போர் ஏன் தௌஹீது என்ற சொல்லின் தமிழ் வடிவமான அத்வைதம் என்ற சொல்லை இந்துக் கொள்கை என்றும் வழிகேடு என்றும் தம் அறியாமையினால் உளறித்திரிகிறார்கள்.... துவிதம் என்றால் இரட்டை என்பது பொருள் இதன் எதிர்ச் சொல்தான் அத்துவிதம், அத்வைதம் என்பது. இரண்டற்ற ஒன்று, எகம், ஒருமை எனும் கருத்துடையது. அத்வைதக் கொள்கை, கோட்பாடு என்றால் ஏகதெய்வக் கொள்கை, ஏகத்துவம், தௌஹீது இதுதான் உண்மை. இது தமிழ் வார்த்தையாக இருப்பதனால் இந்துக் கொள்கையாகிவிடுமா? இந்து மதத்திற்கும் அத்வைதத்திற்கும் என்ன தொடர்பு என்றால் இந்துக்களிலும் பல பிரிவினர் இருக்கின்றனர். இதில் பல தெய்வ உருவ வழிபாடுகளையும் சிலைகளையும் வணங்குவோரும் உண்டு. இறைவன் ஒருவனே அவனுக்கு உருவம் கிடையாது, அவன் அர்ரூபி, ஜோதி மயமானவன் என்று நம்பி இறை நாமங்களை உள்ளத்தால் உச்சரித்து வழிபடுகிறவர்களும் உண்டு. இந்த இரண்டாவது வகையினரின் கொள்கை தான் ஏக தெய்வக்கொள்கை." [கடந்த றமழானில் வெளியான 26.08.2009 அன்றய துண்டுப்பிரசுரத்திற்கான மறுப்பு பிரசுரம்]

இதேவேளை, மேலும் இக்கருத்தினை விளங்கிக் கொள்ள குறித்த கருத்திற்கு ஒப்பானதும், ஒன்றித்ததுமான கருத்தினை அப்துல்லாஹ் என்பவரின் நூலிலும் நாம் அவதானிக்க முடிகின்றது. இவரது கருத்துக்கள் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் எம்மத்தியில் காணப்படினும் இக்குறித்த கருத்து தொடர்பில் அவருடைய கருத்தினையும் நாம் கவனத்திற் கொள்வது மிகவும் பொருத்தமாய் அமையும் என நான் நம்புகின்றேன்.

"தௌஹீது என்ற அறபுச் சொல்லுக்கு நேர் பொருத்தமான தமிழ் சொற்கள் அத்வைதம், ஏகத்துவம் என்பவைதான். ஏகத்துவம் என்றால் ஏகமாய் உள்ளது (ஒரே) தத்துவம்தான் என்பதே கருத்தாகும்.(ஏக + தத்துவம் = ஏகத்துவம்) அத்வைதம், அத்துவிதம் என்றால் இரண்டல்ல ஏகம் என்பதே கருத்தாகும். அதாவது, துவிதம் என்றால் இரண்டு என்பது பொருள். ஆ,துவிதம் என்றால் இரண்டல்ல ஏகம் என்பதுதான். (அ + துவிதம் = அத்துவிதம், அல்லது அத்வைதம்) சரியான ஆய்வில்லாத ஒரு சில அறிஞர்கள் அத்வைதம் இந்துக்களின் கொள்கையென்றும் தௌஹீது என்பதே முஸ்லீம்களின் கொள்கையென்றும் பாமர மக்களை ஏய்க்கிறார்கள்.இது அவர்களின் அறியாமைகளாகும்." [M.S.M. அப்துல்லாஹ்,ஈமானின் உண்மையை நீ அறிவாயா, அகில இலங்கை தரீக்கத்துல் முப்லிஹீன், பக்கம் 237]

எனவே மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மையானதா, எதாவது உண்மை புலப்படும் வகையான தன்மை தோன்றுகின்றதா அல்லது முற்றிலும் தவறான, பிழையான கருத்தா என உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். உங்களது கருத்துக்கள் தமக்குள் இதுபற்றிய ஒரு பலமான கருத்தொன்றின் பகிர்வுக்கு வித்திடவேண்டும் என்பது எனது அவாவாகும். எனவே கருத்துக்களை விமர்சியுங்கள்.

அல்- இஸ்லாஹ் 2008/09

தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடு.

இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது இருப்பு பற்றியும் பல்வேறு அரக்கத்தனமான குரல்கள் ஓங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இவ்வாறான காலத்தின் தேவையினை உணர்ந்து அல்- இஸ்லாஹ் அதன் ஆய்வினை மையப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது.

பொதுவாக, இக்காலகட்டம் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது பூர்வீக வரலாற்றினைப் பற்றியும் வெளிக்கொணரக் கூடிய சாத்தியப்பாடான முயற்சிகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய ஆய்வில் களமிறங்கும் எமது ஆய்வாளர்களே வாய்விரிக்கும் காலமாகும். முஸ்லிம் மஜ்லிஸின் மூன்றாவது இதழான இவ்வெளியீடானது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம், வரலாறு, இருப்பு மற்றும் இவற்றின் தனித்தன்மை என்பனவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி கோர்ப்பொன்றினை செய்துள்ளது. காலங்காலமாக மிகவும் அரிதாகவே கவனத்திற் கொள்ளப்படுகின்ற எமது வரலாறு, அதன் பிறப்பிடம் என்பன பற்றிய விடயங்களுக்கு உண்மையில் விடை திட்டமாக இதுவரை எம்மால் காணமுடியாவிட்டாலும் கூட இத்தகைய ஆய்வுகள் தம் மத்தியில் ஓரளவேனும் எமது பூர்வீகம் பற்றிய அறிவினை பெற்றுத்தருதற்கு ஏதுவானவை என்பதனை மறுக்க முடியாது.

இக்கோர்ப்பில் மொத்தமாக துறைசார்ந்தவர்களதும், விரிவுரையாளர்களதுமாக ஆறு கட்டுரைகளும், மாணவர்களது பத்து கட்டுரைகளும் அதனுடன் இரு கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இவைகள் யாவும் இலங்கை முஸ்லிம்களின் வராற்றின் தொன்மையினை பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் தொன்மையினை வெளிப்படுத்தும் ஆவணங்களை பத்திரப்படுத்தல் தொடர்பிலான கருத்தாடல், இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கொள்கையின் வரலாறு, எதிர்நோக்கப்பட்;ட சவால்கள், சோனக மக்களின் அறபுத்தமிழ் மொழி பற்றிய பரிணாமம், இலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் போன்றன அவசியம் வாசிப்பிற்குட்படுத்த வேண்டியனவாகும்.

என்றாலும், மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஆய்வுக்கட்டுரைகளானது அவர்கள் தேடலில் மிகவும் வலுவிழந்து காணப்படுவதனை உணர்த்துகின்றன. அதாவது, அவர்கள் தமது பல்கலைக்கழக நூலகத்தினைக் கூட முழுமையாக பயன்படுத்த தவறிவிட்டனர் எனத் தோன்றுகின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் பழமைவாய்ந்த வரலாற்று ரீதியிலாக ஆவணப்படுத்தப்பட்ட சில ஆங்கில நூல்களையாவது தூசு தட்டியிருந்தால் இன்னும் தாம் தெரிவுசெய்த கருதுகோள்களுக்கு உகந்த தொன்மையின் சாயங்களை புதுவடிவில் பிறப்பித்திருக்க முடியும்.

எமது வரலாற்று மூலங்களைத் தேடுவதிலுள்ள பிரச்சினை யாதெனில் அவைகள் அறபு, பாரசீகம், இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படுவதும் அதனை மொழி பெயர்ப்பு செய்வதுமே அன்றி மூலச்சான்றுகளோ அல்லது அதனை பாதுப்பதற்கான ஏற்பாடுகளோ அறவே இல்லை என்பதல்ல என்பதனை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். எனவே மாணவர்களுக்கு இவை தொடர்பிவல் அதிக பொறுப்புக்கள் இருப்பதாக நான் கருதுகின்றேன். மேற்போந்த வழுக்களை எதிர்காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் கவனத்திற் கொள்ள வேண்டும். இருப்பினும், இலங்கை இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்பு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலை பற்றியதான ஆய்வுகள் வரவேற்கத்தக்கன. அதிலும் குறிப்பாக 'பூர்வீக ஒத்தடம்' எனும் கவிதை மிகவும் இலாவகமா தொன்மை பற்றிய அரக்கத்தனமான குரல்களை நெரிக்க முற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

“புரட்டிப்பார்
புராதனக் கதைகளையல்ல
உன் முன்னோர்களின் வரலாற்றை
அப்போது புரியும் உனக்கு
நானும் நீயும்
'மனிதன்' எனும்
யதார்த்தத்தை
மண்ணில் தூவியவர்கள் யார் என்று...”

நிதர்சனத்தில், இத்தகையதொரு வெளியீடானது பெரும் சிரமத்திற்கு மத்தியில் முஸ்லிம் மஜ்லிஸினால் ஈன்றெடுக்கப்பட்டிருக்கும்; ஒரு பிள்ளைக் குஞ்சு என்பதனால் மாணவர்கள் பெருமைப்பட்டாக வேண்டும். ஏனெனில் பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே கல்வி நடவடிக்கையில் மட்டுமல்லாது இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டியது அவர்களினது பொறுப்பாகும். அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இச்சுமை அதிகமாகவே உள்ளது. இதனை பல்கலைக்கழக மாணவர்கள் அதன் ஆரம்ப வரலாற்று கட்டங்களில் உணர்ந்தவர்களாக இருந்த போதும் கடந்த இடைப்பட்ட காலங்களில் முற்றாக மறந்திருந்தார்கள் என்றே நான் கருதுகின்றேன். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக எழுச்சி மீதான பங்கு என்பது வெறும் முஸ்லிம் தேசிய எழுச்சிப் போராட்டத்துடன் (2003.01.29) ஸ்தம்பித்துப் போயிருந்தது என்பதே உண்மை.

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியம், பூர்வீகம் பற்றி ஒரு முழுதான கருத்தாடலினை முன்வைத்த தென்கிழக்கு பல்கலைக் கழகம் அதன் பிரக்ஞை பற்றிய கருத்தாடலில் இதனை சாத்தியப்படுத்துவதில் தன்காலில் நிற்க இன்னும் தயங்குவதனை அவதானிக்க முடிகின்றது. இன்னும் இவை பற்றிய ஆழமான சிந்தனையை சாத்தியப்படுத்த அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களையும் துணைக்கு அழைக்கின்றது. ஏனைய முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் இத்தகைய சமுக தேவை நோக்கில் செய்றபடவேண்டும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனிலும், அதற்கான வாய்ப்பு வசதிகளை முழுமையாக பெற்றுக்கொடுக்க கூடிய சூழல் பல்கலைக்கழகம் ஒன்றிற்கே மிகவும் சாத்தியமான ஒன்று. அதுவும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக பொறுப்பு சொல்லவேண்டிய ஒரு கல்விநிறுவகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் காணப்படுவதனால் இம்முயற்சிகளுக்கான முழு காரியங்களையும், வாய்ப்பு வசிதிகளையும் அது மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வினைத்திறனுடன் செயற்படவேண்டும்.

இறுதியாக, தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்றைய நிலையில் தனது சமூகம் தொடர்பில் பாடுபட்டு உழைப்பது போதாது. இன்னும் கடினமாக உழழைக்க வேண்டியிருப்பதுடன், அதன் மூலம் சமூக ஈடுபாட்டில் உயிரோட்டம் கொண்ட சில கல்வியியலாளர்களையாவது, மாணவர்களையாவது பிறப்பிக்க வேண்டும். அதன் கருத்தாடல்களும், தொடர்பாடல்களும் இன்னும்; அகல தமது சிறகுகளை விரித்துக் கொண்டு எல்லா இடங்களுக்குமாக பவனி வரவேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் இதனை எப்போது நிறைவேற்றும்?

Moorish Connection...Tunisia

Carthage (near the site of modern Tunis) one of the wealthiest and most powerful cities of the ancient world might have had commercial links with Arabs of that time – the Carthagian traders exchanging the products of Egypt, the orient and Greece for the raw materials from the west.

But the Ceylon moors of Sri Lanka can claim, proudly, to have played a small but not insignificant part in the independence struggle of modern Tunisia.

The Neo-Destour Party, a spin off from the destour party of the early 1930s was led by a young lawyer and Journalist Habib Bourguibah who had completed his studies in Paris, as Secretary General.

These “Young Turks” led a revolutionary movement but had to suffer brutal repression at the hands of the French colonialists, Habib Bourguiba along with other leaders, had to face exile imprisonment and even the possibility of summary execution.

In 1944 Habib Bourguiba fled Tunisia in disguise in a smuggler’s boat and landed on a deserted outback in Libiya. Still disguised the Neo-Destour Party leader trekked by foot on camel to Egypt, entrusting the party to the new Secretary – General, Haji Salah ben Youssef.

For the next five years Bourguiba toured the Arab countries, the Far East and America mobilising public opinion for Tunisia’s cause – in its fight for independence from French colonial rule.

When Habib Bourguiba arrived in Sri Lanka in 1951 he was president of Neo Destour Party. He was accompanied by Mr.Taieb Slim. In the few hours they spent in Colombo off their ship they called at the “Ceylon Observer” office at Lake House, Colombo and were interviewed and photographed for the news paper. Press publicity in this country helped to popularise the Tunisian independence movement.

In 1950 the French government belatedly held out the prospect of eventual internal autonomy and started negotiations, these dragged on till they were abruptly ended by Paris in the middle of December 1951 and vigorous suppression of the nationalist movement was resumed. In January 1952 Bourguiba and other Neo-Destour leaders were arrested and interred.

The Tunisian struggle intensified and despite stern, repressive measures, there was mass agitation, accompanied by terrorism. Armed bands appeared in the mountains.

The Tunisian leaders sought the help of the All Ceylon Moors’ Association (which represented the Ceylon moors in Sri Lanka) once again.

For in 1954 the prime minister of India, Burma, Pakistan, Indonesia and Sri Lanka were meeting in Colombo- the Asian Prime ministers’ Conference.

The Prim minister of India, Jawaharlal Nehru was in this select company of PMs, and as the protagonist of independence of emergent nations from colonial rule, was found to be the ideal spokesman for Tunisia’s struggle to throw off the French yoke.

Bourguiba could not come to Sri Lanka. He was in French prison and was reported to be recovering from Hernia. Taieb Slim and Haji Salha Ben Youssef were sent here to make representations to the Asian Prime Ministers’ Conference.

The Asian Prime Ministers espoused the cause of Tunisia in the United Nations.

The deadlock ended in July 1954 when France finally recognised the right of Tunisia to complete autonomy. More hesitancy and delayed action but soon, though reluctantly the nationalist leaders were released and conventions were actually signed on June 3, 1955.

On March 20, 1956 France recognised the independence of Tunisia which was admitted to the United Nations on Nowember 12, 1956. On July 25, 1957, Tunisia was proclaimed a sovereign republic with Habib Bourguiba as it’s first President. He is still president of that courageous country.

Even many years afterwards Habib Bourguiba did not forget the Ceylon Moors of Sri Lanka. He sent this special message to them;

“To Ceylon, so distant and yet so close, I am happy to address a message of my cordial friendship. While this sentiment of friendship embraces all the inhabitants of this hospitable island, where inn days of adversity I experienced a generous and comforting feeling of fraternal solidarity, it is natural that I should spare a special thought for the moslems of this island.

“Are they not for the greater part the descendants of those Moorish navigators and merchants, who were driven by adventure in the most noble and exalted sense of the word to the most distant shores of the ‘seas of shadows’?

“Those moors, as you know, are the ancestors of the North Africans.

“Thus, in addition to the common faith, which sprang up in these two widely separated parts of the world, there are ties of blood. And to crown all this, similar destinies have caused us to experience the same trials of domination and the same joy of regained liberty.”
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger