சங்கமார் மடம்

வரலாற்றுக் குறிப்பு - I
 
இயற்கையில் வாழ்ந்த மனிதன் ஆற்றலுடையவன். அவனுடைய ஆற்றலுக்கு தகுந்தாற் போன்று அவனுடைய சூழலில் கிடைத்தவற்றையும் தனக்கு பயன்படுத்திக் கொண்டான். இந்நிலையில் அவனுடைய பாதுகாப்பினையும், தேவையினையும் நிறைவுசெய்து கொள்ளும் நிலை அவனுக்கு கை கூடிய போது தனக்கான இருப்பிடத்தையும் தனது எண்ணம் வகுத்தாற் போன்று அமைத்துக் கொண்டான். அவனுடைய தேவையின் அடிப்படையில் அமைந்த இம்மனைகள் கட்டடிடங்களாயின. இவ்வாறு பல்கிப் பெருகிய பல்வேறு வகையான கட்டடிடங்களில் ஒரு வகையே 'மடங்கள்' ஆகும்.
 
மடம் எனும் இடம் பொதுவாக துறவு வாழிடங்களாக கருதப்படுகின்றது. இருப்பினும், இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் 'மடங்கள்' பெருமளவிற்கு இவ்வாறு துறவு வாழிடங்களாக இருக்கவில்லை என்பது வரலாற்றில் முக்கியமானதொன்று. அக்காலத்தில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்களும், ஏழை எளியவர்களின் வயிற்றுப் பசி தீர்க்கும் தண்ணீர் பந்தல் மடங்களும், சமய பக்தர்களும், யாத்திரிகர்களும் தங்கிச் செல்லக்கூடிய சத்திரமாகவும், யாத்திரிகர் விடுதிகளாகவும் பல்வேறுபட்ட சமய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டும் மடங்கள் பல்கிப் பெருகியிருந்தன.
 
நடைப் பயணமாககவோ, மாட்டு வண்டியிலோ பயணித்த போக்குவரத்து குன்றிய அக்காலத்தில் தத்தம் களைப்பை போக்கிக் கொள்ளவென, இளைப்பாறவென 'இளைப்பாற்றுமடம்', 'வழிப்போக்கர்மடம்' என்பனவும், ஒரே நேரத்தில் பலர் தங்கி இளைப்பாறத்தக்க வகையில் 'சத்திரம்' என்பனவும் அமைக்கப்பட்டு காணப்பட்டுள்ளன. இவை தெருவோரங்களில் மாத்திரமன்றி, வயற்கரை, கடற்கரை போன்ற இடங்களிலும் தொழில் புரிவோர் இளைப்பாறவென அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, இளைப்பாற்றுத் தேவை எங்கெங்கிருந்தனவோ அவ்விடங்ளில் எல்லாம் இவ்வாறான மடங்கள் உருவாக்கப்பட்டு பல்கிப் பெருகியிருந்தன.

வணிகர்களும், செல்வந்தர்களும் 'மடம்' நடாத்துவதற்கென தோப்புக்களையும், கட்டிடங்களையும் வழங்கிய போது அக்கட்டிடங்கள் மடங்களானதுடன், மடங்கள் கட்டிடங்களாலும் உருவாக்கப்பட்டன.
இத்தகைய மடங்கள் கி.பி. 10ம் நூற்றாண்டில் இலங்கை மீது சேழர்களினால் மேற்கொள்ளப்பட்ட படைnயெடுப்பு நடவடிக்கையின் மூலம் அழிவுற்றதாகவும் குறிப்புக்கள் உண்டு. பிற்காலத்தில், இலங்கையில் கிறித்துவ மதம் காலணித்துவ வாதிகளினால் பரப்பப்பட்டு வந்ததுடன் அதற்காக மடங்கள் ஆலயங்கள் அமைக்கப்பட்டது. மட்டுமல்லாது, ஒல்லாந்தர் ஆட்சியின் போது இவ்வாறான மடங்கள் ஆட்சி நிருவாகத்தின் கீழாக பதியப்பட்டிருந்தமையினால் அவை பற்றிய ஆதாரங்கள், குறிப்புக்கள் சிலவற்றை காணவும் முடிகின்றது. அவற்றுள் சங்கமார் மடமும் ஒன்றாகும்.
 
பண்டைய நிந்தவூரில் அமைந்திருந்த 'சங்கமார் மடம்' என்பது உலகப் பிரசித்தம் பெற்றதாயிருந்தது என்பதற்ககான ஆதாரங்கள் இன்றும் கிடைக்கின்றன. இம்மடம் ஊரின் எவ்விடத்தில் அமையப்பெற்றிருந்தது என்பது குறித்து ஆராய்கின்றபாது பல கருத்துக்கள் குறிப்புக்களில் காணப்படுகின்ற போதிலும் செய்மதிப்படத்தில் இங்கு காட்டப்பட்டுள்ள இடத்தில் அமையப் பெற்றிருந்ததாக உறுதிப்படுத்த எம்மால் முடிகின்றது. செய்மதிப்படத்தில் நிந்தவூரில் அமையப் பெற்றுள்ள ஒரு பகுதி குறிப்பாக 'அம்பலம்' (ambalam) எனக் குறித்து விளக்கப்படுகின்றது. அம்பலம் என்பது அக்கால மக்கள் தமது பிரயாணங்ளின் போது ஆங்காங்கே ஓய்வெடுத்துச் செல்வதற்கென அமைக்கப்பட்டிருந்த தங்குமிடமாகும்.
 
போக்குவரத்து, தொடர்பாடல், வைத்தியம் எனும் துறைகளில் முன்னேற்றமடையாத அக்காலத்தில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் நடைப் பயணமாகவோ, மாட்டு வண்டில் பூட்டியேதான் செல்ல வேண்டியிருந்தது. நடைப்பயணம் என்பது தமது பிரத்தியேக தேவையின் பொருட்டு மட்டுமன்றி ஆலையத்திற்கு செல்லும் யாத்திரையாகவும் விளங்கின. பிரசித்தி பெற்ற ஆலயங்கள் வேறு வேறு தூர இடங்களிலேயும் காணப்பட்டன. இவ்வாலயங்களின் திருவிழாக் காலத்திலோ, விரத நாட்களை முன்னிட்டோ அல்லது தாம் வைத்துக் கொண்ட நேர்த்தியின் பயனாகவோ அந்தந்த பிரதேசங்களிலிருந்தும், தூர இடங்களிலிருந்தும் பாதயாத்திரை செல்வது வழமை. இப்பாதயாத்திரையின் பொருட்டு யாத்திரை தலங்களை முன்னிட்டு பிரதான பாதைகளில் உள்ள ஆலயங்களை அண்டியும், தெருவோரங்களிலும் மடங்கள், சத்திரங்கள் தோன்றி இயங்கின. இச்சந்தர்ப்பங்களில் சங்கமார் மடமானது ஒரு இடத்தங்கலிற்ககான இடமாக அமைந்திருந்தது.
 
கதிர்காம யாத்திரையானது சமய வேறுபாடுகளுக்கு அப்பால் பௌத்தர்கள், கிறித்துவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என யாவரும் தரிசிக்கும் ஒரு தலமாகும். அக்காலத்தில் யாழ்ப்பாணம் இருந்து கதிர்காமம் செல்லும் மக்கள் மாவிட்டபுரத்தில் தமது பாதயாத்திரையினை ஆரம்பித்து நல்லூர் வழியாக பொலிகண்டி கந்தவனக் கடவுளை தரிசித்து, தொhடந்தும் செல்வ சந்நிதியின் திருவிழாவை முடித்து, முல்லைத்தீவு சென்று அங்கு வற்றாப்பளை அம்மன் கோயில் விசாகப் பொங்கலை நிறைவு செய்து கொண்டு வரும் வழியில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை வழிபட்டு சங்கமார் மடம் வந்து இளைப்பாறிவிட்டு அருகிலுள்ள வளத்தாப்புட்டி மீனாட்சியம்மாளினை தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டு கதிர்காமம் ஆடிவேல் விழாவிற்கு செல்வர்.
 
இலங்கையில் போர்த்துக்கீசர்களின் வருகையின் பின்னர் முஸ்லிம்களினதும், இந்துக்களினதும் சமய தலங்கள் அழிப்பும், காணிகள் சுவீகரிப்பும் அவர்களால் இடம்பெற்றன. இந்நிலையில் மக்களினால் பயன்படுத்தப்பட்டு வந்த மடங்களும் சேதமாக்கப்பட்டன. மறுபுறம், நாட்டில் ஏற்பட்டு வந்த பல்வேறு நவீன கோக்குவரத்து வசதிகள் காரணமாக இளைப்பாற்று மடங்களின் தேவை குறைந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் நாட்டில் நிலவிய உள்நாட் யுத்தம் காணரமாக இவ்யாத்திரை முறைகள் செயலற்றுப் போயின. சில மடங்கள் அழிவடைந்து விட்டன. அவ்வாறு அழிவுற்ற மடங்களில் நிந்தவூரில் காணப்பட்ட் புகழ்பெற்ற 'சங்கமார் மடமும்' ஒன்றாகும்.
 
இன்று 'சங்கமார் மடம்' அமைந்திருத்ததற்கான எந்தவொரு சான்றுகளையும் மடம் அமைந்திருந்த இடத்தில் காண முடியாவிட்டாலும், அவ்விடத்தில் இன்றும் உறுதியாய் நிற்கும் சில பாரிய நிழழல் தரும் மரங்களும், அவற்றை அனுபவித்த எமது முன்னோர்களின் அனுபவங்களுமே சான்றாய் எச்சமுள்ளன.
 
அவதானத்திற்கு!!!
2009ம் ஆண்டின் பின்னர் நாட்டில் நிலவுகின்ற சமாதான சூழல் காரணமாக மீண்டும் யாத்திரை முறைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கதிர்காம யாத்திரையில் ஈடுபடுகின்ற பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை வழியில் எதிர் நோக்குவதாயும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இச்சந்தர்பத்தில் மீண்டும் இத்தகைய 'சங்கமார் மடத்தின்' தேவை இன்றியமையாததாகும். இது குறித்து நிந்தவூர் உள்ளுராட்சி அதிகார சபையானது கருத்திற்கொள்வதன் மூலம் நிந்தவூரின் புகழை மீண்டும் நிலைநாட்ட முடியும்.

கொண்ட வட்டுவானில் கோபுரத்துடன் ஒரு பள்ளி...

சம்மாந்துறைப் பெண்ணாள் எனும்
என் தாய் மண்ணின்...
கூந்தல் கோரி கொண்டை முடிய
ஊவா வெல்லஸ்ஸ பரணகம எனப் பரந்து
மலையும் காடும் என வாரி முடிந்து
கொண்டை வட்டுவானில் கோரி முடிய வேண்டும்....


அவள் கூந்தலில் விழுந்த மழைப்பால்
உருண்டு திரண்டு மதுரமாகி
இங்கினியா கலை எனும் மார்பில் தேங்கி
பட்டிப்பளை எனும் முலைக்காம்பினூடே
அமுதூட்டி பசிபோக்கி அரவணைத்தாள்
சம்மாந்துறை வேவகம்பற்று எனும் எம்பெருநிலத்தை.....

காலம் உருண்டோடிக் கயவர்கள் கண்குத்திக்
கூந்தல் முதற்கொண்டு வயிறுவரை
நம் தாயைச் சிறைபிடித்து
நமக்கே எல்லை இட்டார்...பாவம்....

போசாக்கு குறைந்து மந்த புத்திக் குழந்தைகளாய்
மாரி பார்த்து மழையைநம்பி
நாற்றுப் போடும் நாதாரிக் கூட்டமாயும்
நேரம் குறித்து அளவு பார்த்து தண்ணி திறக்க
அந்த மூத்திரத்தில் கரப்புக் குத்தி
விரால் பிடித்துப் பிடரி முறிக்கும்
போடி மார்களாயும் நாம்......இருந்துவிட்டோம்....

உள்ள மாட்டுக்குள் உரிய மாடறுத்து
உண்டு உரம் செய்த உழவர் கூட்டம் நாம்...
எருது பூட்டி ஏர் இழுத்து
எருது கொண்டே எம்மரமும் இழுத்து
வண்டி கட்டி வரலாறு படைத்த
மறவர் கூட்டம் நாம்....
மறந்து போனோம் நம் வரலாறு....

பட்டிப்பளை நீர் கொண்டு
பல் துலக்கி முகம் கழுவி
நீராடி நிலம் விதைத்து
பேரோடு வாழ்ந்த நாம்தான்
பட்டிப்பளையின் மூத்த பிள்ளைகள்...

பட்டிப்பளயாறும் அதன் நீரும் எமக்குத்
தாயும் தாய்ப்பாலும்.....

சென்ற போகமொன்றில் நடந்த கொடுமை ஓன்று
கேள்விபட்டேன் உம்மா....நெஞ்சு வெடிக்கின்றது...
நம் நிலத்துப் பயிர்கள் எல்லாம்
பசி கொண்டு பால் கேட்க
முலை தூக்கி விருப்போடு
பாலூட்ட வருகையிலே....

அவள் சுரந்த பாலை கொடுக்க மறுத்த
கொடும்பாவி மனிதர்கள் புரியும் சதியால்
பயிர்கள் இறந்து பாழாய்ப் போன
பரிதாபமொன்றும் நடந்துவிட்டதாம்....

பண்டாரத் தீவிலும் பதியத் தளவாயிலும்
உஹன மகா ஓயாவின் காடுகளிலும்
களனி கண்டு கால்நடை மேய்த்து
கருக்கொண்டு காலம் தள்ளிய முன்னோரின்
வேவகம்பற்று எனும் நமது தாய் மண்ணின்
வளம் நுகர வழியற்று வாழ்விழந்த கதை
வரலாறே நீ மறந்தாயோ....!

செத்தது பயிர்களல்ல...
நம் நிலத்தின் மானமும் ரோஷமும்...
நம் வீரமும் விவேகமும்......
ஒற்றுமை அற்று விமர்சனம் கூடி
பொறாமை எரிச்சல் எல்லாம் சேர்ந்து
சீரழிந்த சமூகமாய் இன்று நாம்.....

சாதிக்கும் வெறி நமது மக்களிடம் இல்லை
தட்டிக் கொடுக்கும் தாராளமும் இல்லை.....

வீரம் என்பது விமர்சனம்தான் என
விவாதிக்கும் வீணர் கூட்டம்
விடியலைத் தேடி வெளிச்சத்தில் அலைகின்றார்....

பட்டிப்பளை என்னும் நாம் தாயை
கோம்பை மட்டையும் ஓலையும் இளக்கி
மாடும் ஆடும் இன்னும் பிறவும்.....சுகிக்கட்டும் என
கொளனிகளில் கால் கழுவ விட்டுவிட்டு ...

நம் குடலைப் பயிர்களை நீரின்றிக் கொல்ல
நாம் என்ன சூப்பி மிட்டாய் வீரர்களா....?
வெறிகொண்டு போராட மனமிங்கு நினைக்கின்றது
பறி கொண்ட எம் நிலத்தின் பவிசுகள் எல்லாமே
தறிகெட்ட மூடர்கள் தத்துக் கொடுத்தாரோ....
அறிவேன்...அறிவேன்....எம்வரலாறு
பின்னர் துணிவேன்...துணிவேன்......புது வரலாறு...
நான் கொண்ட லட்சியங்கள் பல
அதிலே இதுவும் ஓன்று.....
கொண்டவட்டுவானில் ஒரு பள்ளி கோபுரத்துடன் அமைப்பது .........


நன்றி முகம்மத் சனூஷ்
( கடந்த மகா போகத்தில் நீரில்லாமல் இறந்து போன என் மக்களின் உயிர் நாடியான வெள்ளாமைகளை நினைத்து வேதனையுடன் எழுதப்பட்டது......)

ஆட்சி மாற்றமும் அணைக்கும் கரங்களும்

நாட்டின் புதிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவரது  ஆதரவாளர்களினால் 'பொது வேட்பாளர்' என்ற நாமத்தின் பெயரால்  கருணையின் வடிவாகவும் வெளிக்காட்டப்பட்டார். அவர் முந்தய சனாதிபதி மகிந்தவினால் புரியப்பட்டு வந்த சர்வாதிகார ஆட்சியினையும், ஊழல் நிறைந்த அரசாங்கத்தினையும் துவைத்து கறையகற்ற வந்தவர் என்ற பார்வையும் மக்களிடம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்தவினையும் அவரது அரசாங்கத்தினையும் பைத்தியத் தனமாக புகழ்பாடிய பல்வேறு ஊடகங்களும் தற்போது புதிய சனாதிபதியின் நாமத்தினை பாராயணம் செய்து வருகின்றன.

மகிந்தவின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த சனாதிபதி சிறிசேனா இலங்கையில் நாட்டினுள் வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளின் வருகையை எதிர்த்து போராடிய அன்றய நவ சமசமாஜ கட்சியின் முக்கியத்தவர்களுள் ஒருவர். யதார்த்தத்தில் அவர் ஒரு மத்தியதர வர்த்தின் நலனிலும், அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் ஆர்வமுடையவர். ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக அமெரிக்காவினால் வளர்த்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரத்துங்க, ரணில் விக்கரமசிங்க ஆகியோர் தூண்டப்பட்டு இடம்பெற்று வந்த போட்டி நிகழ்ச்சி திட்டத்தில் உலக ஏகாதிபத்திய அமெரிக்காவின் நல்லாசியுடன் கடந்த சனவரி மாதம் 8ம் திகதியன்று சிறிசேனா இலங்கை சனாதிபதி அதிகாரத்திற்கு உரித்துப் பெற்றுக் கொண்டார்.

சிறிசேனாவின் அரசியல் பிரவேசமானது 1960ம் ஆண்டின் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்டது. பொலன்நறுவை பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் இளைஞராக வளர்ந்து வருகின்ற அப்போது என். சுன்முகதாசனினால் வழிநடாத்தப்பட்டு வந்த மாவோயிச கம்மியுனிச கடட்சியில் இளைஞர் அணியில் சேர்ந்து கொண்டார். அக்காலப் பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மாவோயிச செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் மத்தியல் எழுச்சியும் ஆதரவும் இருந்தது. காரணம் 1964ம் ஆண்டுகளில் லங்கா சமசமாஜ கட்சியானது வீரியம் இழந்து அப்போது மத்திய தரவர்கத்தினர் மத்தியில் ஆதரவவினை பெற்று வந்த இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டது.

இத்தகைய சமசமாஜ கட்சியின் பின்னடைவினை தொடர்ந்தே சிங்கள தேசிய வாதத்தினை இளைறுர்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவென ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்கள் ஆயுத கலாச்சாரத்திற்கு ஊட்டம் செய்யப்பட்டார்கள். 1971ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி கட்சியானது அரசாங்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்ட போதே சிறிசேனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இக்காலப் பகுதியிலேயே சுமார் 15000 இளைஞர்கள் இராணவத்தினரால் அறுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிசேனா ஜே.வி.பியில் அப்போது அங்கத்தவராக இருந்தாரா என்பது தெளிவில்லை. சுமார் 15 மாதங்கள் தடுப்புக் காவலில் கடந்திவிட்டு 1972ம் ஆண்டில் சிறையிலிருந்து வnளிவந்ததும், சிறிசேனா இலங்கை சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.

சுதந்திரக் கட்சியில் நம்பிக்கைக்குரியவராக அவர் தொழிற்பட்டதன் காரணமாக அக்கட்சியில் அவருக்கு மென்மேலும் உயர்வுகள் கிடைத்தன. 1979ம் ஆண்டில் அதன் இளைஞர் அணிக்கு செயலாளராகவும், 1983 களில் அதன் இளைஞர்கள் முன்னணியின் தலைவராகவும் இருந்தார். 1989ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியீட்டி பாராளுமன்றம் நுளைந்தார். 1994 – 2001 ஆண்டு வரை அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவினது அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார். 2001ல் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை வென்றெடுக்க சற்று காலத்திற்கு முன்பதாகவே சிறிசேனா சுதந்திரக் கட்சியின் செயலாளராக அமர்த்தப்பட்டார். அண்மையில் சனாதிபதி மகிந்த நடந்து முடிந்த 2015 சனாதிபதி தேர்தல் அறிவித்த 2014 நவம்பர் 21ம் திகதி வரையில் சிறிசேனாவே செயலாளராக தொடர்ந்து 13 ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார்.

சனாதிபதி தேர்தலின் போது அனேக மக்களின் இரக்கத்தினை அள்ளிக்கொண்ட சிறிசேனா முந்தய ஆட்சியாளர்களான சந்திரிக்கா மற்றும் மகிந்தவின் காலத்தில் இடம்பெற்று வந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை, வாழ்க்கைத் தரம் மற்றும் சனநாயக உரிமைகள் பற்றி விமர்சித்து வந்தவர். இருப்பினும், சிங்கள தேசியவாதத்தின் அடக்கு முறை ஆட்சியினையும், விடுதலைப் புலிகளுடன் அரசு ஈடுபட்ட சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற அநியாயங்களையும், குற்றங்ககளையும் முழுமையாக ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

2005ம் ஆண்டில் மகிந்த ஆட்சிக்கு வந்த போது விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை சிறிசேனா வகித்து வந்தவர். 2010 ஆண்டிலிருந்து சனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மட்டும் சுகாதார அமைச்சராக இருந்தார்.
இவ்வருடம் சனவாரி மாதம் 2ம் திகதி டெய்லி மமிறர் பத்திரிகைக்கு வழங்கிய செயவ்வியில், விடுதலைப் புலிகளுடன் அரசாங்கமம் செய்து கொண்டிருந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையினை 2006ல் முடிவுறுத்திக் கொண்டு கொடிய யுத்தத்தினை மகிந்த முன்னெடுத்து சென்றிருந்த போது 6 தடவைகள் தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்ததாக ஒரு புளுகினை விட்டிருந்தார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட யுத்தத்தின் இறுதி இரு வாராங்களும் தானே பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்ததாக கூறியிருந்தார்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி இருவாரங்களிலும் ஆகக் குறைந்தது 40,000 தமிழ் பிரசைகள் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தாக ஐ.நா. சபையின் புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஈற்றில் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்கள் எதுவித பாராபட்சமும் இன்றி செல்வீச்சுகளுக்கு ஆட்பட்டு படுகொலை புரியப்பட்டிருந்தனர் என அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த நாட்களிலேயே சிறிசேனா தான் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக பணிபுரிந்த காலப்பகுதி என குறிப்பிட்டிருந்தார்.
 
சிறிசேனா கிராமத்து மக்களின் தோழனாக கருதப்பட்டு வருபவர். கிராமப் புறங்களில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதும், அவர்களின் வாழ்கைத் தரத்தினை மாற்றியமைப்பதும் அவருடைய அரசியல் குறிக்கோளாக இருந்து வந்தது. இருந்தும், அவர் விவசாய அமைச்சராக இருந்த போது மேட்டுக் குடி விவசாயிகளுக்கு சாதகமான போக்கினையே அவர் கடைப்பிடித்து வந்தார் என்பதும், விதை நெல் மற்றும் உரம் முதலியவற்றில் பல்தேசியக் கம்பனிகளுக்கு இருந்து வந்த வர்த்தக மேலாதிக்கத்தின இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை என்பது கய்க்கும் உண்மை. 2012ல் ஆயிரக்கணக்கான சாதாரண விவசாயிகள் நெல் விலையை உயர்த்தக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேனா அந்நடவடிக்கை அப்போதைய சனாதிபதி மகிந்தவினை தோற்கடிக்க சர்வதேசம் மேற்கொள்கின்ற சதி முயற்சி என வர்ணித்தார்.
 
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி யுத்த குற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அணுசரணையுடன் சர்வதேச சதியொன்று இலங்கை மீது இருந்து வந்தது. இதன் மூலம் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான உறவுகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினை அழித்தொழிக்க முயற்ச்சித்தது. மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் பின்புலத்துடன் நாட்டின் சனாதிபதியாக சிறிசேனா அமர்த்தப்பட்டார். இதன் மூலம் தற்போது இலங்கைத் தீவானது பீஜிங்கிலிருந்து அகன்று அமெரிக்காவுடனான தொடர்புகளை பலப்படுத்திக் கொண்டு வருகின்கிறது. ஆசியாவில் சினாவின் ஆதிக்கத்தினை தணித்து தன் அதிகராத்தினை வியாபித்துக் கொள்ள அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள திட்டம் இதுதான்.
 
சுகாதார அமைச்சராக 2010ம் ஆண்டிலிருந்து நவம்பர் 2014 வரையிலும், சுகாதார பணியாளர்கள் தமது நிலைகுறித்து மேற்கொண்ட அனைத்து பேராட்டங்களையும் மக்கள் மயப்படாத வகையில் கவனித்துக் கொணடவர். தனது அமைச்சின் ஊடாக வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் இடம்பெறா வகையில் அதற்கான நீதிமன்றின் உத்தரவினை பெற்றுக் கொண்டவர். 2014 ஆகஸ்டில் சுகாதார பணியாளர்கள் தமது படிகளை உயாத்தும் படி கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரவேசத்தை வைத்தியசாலைக்குள் அனுமதித்திருந்தார்.
 
இலங்கையின் கிராமப் புறங்கள் தோறும் சுமார் பத்து இலட்சம் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிப்புற்றுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பிரச்சினை பற்றி கவனமம் கொள்ளும் வகையில் சுத்தமான குடிநீர் விநியோகம், மனித உயிருக்கு பாதகமான இரசாயண வேதிப் பொருட்கள் முதலிய நிறுநீரக நோய்க்கு காரணமாய் அமைகின்ற விடயங்கள் குறித்து உல சுகாதா தாபனத்தினால் முன்மாழிவுகள் வைக்கப்பட்ட போது அதனை சிறிசேனா அதனை நிராகரித்திருந்தார்.
 
மகிந்தவினை ஆட்சியிலிருந்தும் விரட்ட சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் வாசிங்டனினாலும் தேர்வு செய்யப்பட்டவரோ சிறிசேனா. இஇதற்கு காரணம் அவர் பற்றிய கடந்த கால பதிவுகளாகும். அவர் அடக்கு முறைக்கு எதிராகவும், மத்தியதர வர்கத்தின் நலன் சார்பிலும் பாடுபடும் சேவகன். கடந்த 2014 நவம்பர் மாதம் அவர் தேர்தலில் போட்டியிட்டமையானது நீண்ட கால ஆலாசனைகளதும், திட்டத்தினதும் வெளிப்பாடு. 2011ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்க தூதுவராலயம் சிறிசேனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் மற்றும் அமெரிக்காவின் முகவர் நிறுவனமாக தொழிற்படுகின்ற ருளுயுஐனு என்பன இலங்கையில் இணைந்து செயலாற்றக் கூடிய நபராக சிறிசேனாவினை தெளிவாக அடையாளப்படுத்தியதன் விளைவாக 2013 ஜுன் மாதமளவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ''சுகாதார தலைமத்துவ பரிசிலினை' பெற்றுக் கொள்ள பயணமானார்.
 
சிறிசேனா அவருடை செவ்வியில், மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டும் விலகி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் 'பாராளுமன்றம், அமைச்சுக்கள், நீதிமன்ற்கள், இராணும் மற்றும் முழு அரச நிறுவனங்களும் மகிந்தவின் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என விளக்கியிருந்தார். எனினும், அவை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது தெளிவு. பல்தேசிய கம்பனிகளின் முகவர்களும், உள்நாட்டு வர்த்தக வாணிப வர்கத்தினரும் மகிந்தவின் அரியணையை சூழக் காணப்ட்ட கூட்டத்தினருக்கும் பல்வேறு சொத்துக்களையும், செல்வங்களையும் பொற்கிளிகளாக வழங்கியே வந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பாகவும், இலங்கையின் கடந்தகால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்திற்குட்படுத்தவும் நாட்டில் ஏற்பட்டு வருகின்ற பாரிய சீன முதலீட்டு திட்டங்கள் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளை அளந்ததனால் நன்மையும் சிறிசேனாவுக்கு கிடைந்திருந்தது.
 
தற்போது சிறிசேனா சனாதிபதியாக அதிகராத்தில் அமர்த்தப்பட்டாயிற்று. வாசிங்டன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு என்பன அவரிடம் இருந்து கைமாறினை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சிறிசேனாவின் ஆட்சியானது சமாதானத்தினையோ, சுபீட்சத்தினையோ அல்லது சனநாயகத்தினையோ நாட்டில் நிலை நிறுத்தப் போவது கிடையாது. அவரின் பின்புலத்தில் இருக்கின்ற நபர்கள் யாவரும் விரும்புவது மத்திய வகுப்பு மற்றும் கிரமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை குன்றச் செய்து அதனால் இலாபம் ஈட்டுவதற்கும், திறந்த பொருளாதார கொள்கையை மேலும் தளர்த்தி ஓட்டையாக்கி ஏகாதிபத்திய முதலீட்டினை நாட்டிற்குள் அதிகரிப்பதற்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிய பசுபிக் பிராத்தியத்தில் சீனாவின்   பொருளாதார், இராஜ தந்திர தொடர்புகளை நசுக்குவதன் மூலம் இலங்கைத் தீவினை அமெரிக்காவின் வலைக்குள் சிக்க வைத்து அதன் வாயிலாக பிராந்திய ரீதியிலாக அமெரிக்க இராணுவ பலத்தை வலுப்படுத்துவதும், அதன் யுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துளைப்பு நல்குவதுமாகவே சிறிசேனாவின் நிருவாகம் அமையப் போகிறது.
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger