முஸ்லிம் - தமிழ் அரசியல்தீர்வு

30 August 2016

யாழ்ப்பாணத்தில்

கலப்பற்ற உழுந்து வடையொன்று 30 ரூபாய்,
இறால் வடை 05 ரூபாய்

வவுனியாவில்

கோதுமை மா கலந்த உழுந்து வடை 30 ரூபாய்,
இறால் வடை 10 ரூபாய்

கொழும்பில்

ஏதோ உழுந்து வடை என்ற பெயரில் ஒன்றை 45 ரூபாய்க்கும்,
இறால் வடை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

அதேவேளை, இங்கு எல்லா இடத்திலும் எதனை கீரை வடை என்கின்றனரோ அதனைத்தான் கல்முனையில் மக்கள் உழுந்து வடை என வாங்கி உண்ணுகின்றனர். இவர்களுக்கு கீரை வடைதான் உழுந்து வடை.

இதனால்தான்

மறைந்த தலைவர் அஷ்ரப் தென்கிழக்கு மாகாணம் என்ற கருத்தை முன்வைத்தார்.

விக்னேஸ்வரன் ஐயா வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்கிறார்.

அதாவுல்லாஹ் கிழக்கு பிரிந்தே  இருக்க வேண்டும் என்கிறார்.

ஹசன் அலி வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட கூடாது. இணைக்கப்படின் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் என்கிறார்.

ஆனால் பாருங்கள்...
உழுந்து வடையும், இறால் வடையும் கண்டியில் அதிகம் விற்பது கிடையாது.

அதனால், றஊப் ஹக்கீம் அவர்கள் மெளனம் சாதிக்கின்றார்.
:p

0 comments:

Post a Comment

Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger